வரனுமா என” அதற்கு கொம்பன் கோபமாக
”அப்பா நீ எதுக்கு காபி போடற, அதெல்லாம் பொம்பளைங்க வேலை”
”அடிவாங்குவ ராஸ்கல், அதென்னடா ஆம்பளை பொம்பளைன்னு பேதம் பார்க்கற, நம்ம வீட்ல இருக்கறப்ப உன் அம்மாவுக்கு அடிக்கடி உடம்பு முடியாம போன சமயம் நான் என்ன வேலைகாரியை வைச்சி சமையல் ஆக்கிப் போட்டேனா என்ன, நானேதான் சமைச்சி போட்டேன், அப்பலாம் வக்கனையா சாப்பிட்டுட்டு இப்ப இப்படி பேசற நாளைக்கே உன் பொண்டாட்டிக்கு காய்ச்சல் கீய்ச்சல் வந்து முடியாம படுத்தாள்னா நீ என்ன செய்வியாம், எதுக்கும் என்னைப் போல நீயும் சமையல் கத்து வைச்சிக்க, அட ரசம் குழம்பு செய்றதாவது கத்துக்கடா அவசரத்துக்கு பயன்படும் அப்புறம் இந்த காபி டீ போடறது கூட கத்துக்க, நான் உன் மாமனார்கிட்ட கேட்டேன் உன் பொண்டாட்டிக்கு சமைக்க தெரியுமான்னு அதுக்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா” என கேட்க கொம்பனும் கணக்குப்பிள்ளையும் ஆர்வமாக
”என்ன சொன்னாரு” என கோரஸாக கேட்க
”பாவம்டா சின்ன பொண்ணு சமையல் கூட தெரியாதாம்” என வருத்தமாகச் சொல்ல கொம்பனுக்கு சலிப்பே வந்தது
”அடச்சே இது வேறயா ஏம்பா அவள் பொண்ணுதானே, சமையல் கூடவா கத்துக்க மாட்டா, என்னத்த அவளை வளர்த்தாங்களோ“
”டேய் அவள் சின்ன பொண்ணுடா, அவள் அம்மா இருந்தவரை எதுவும் தெரியலை, அவங்க போன பின்னாடி பாவம் மனசு உடைஞ்சி போயிட்டா, சமையல் எல்லாம் அம்மாங்க சொல்லித்தரனும் மத்தவங்க சொல்லிக் கொடுத்து கத்துக்கிட்டா கைபக்குவம் வராது கொம்பா, இதெல்லாம் சொன்னா உனக்கு எங்க புரியப்போகுது”
”எனக்கு புரிய வேணாம் ஆக என் முறைபொண்ணுக்கு சமையல் தெரியாது, இனி அவள்கிட்ட சமையல் விசயமா நான் எதையுமே கேட்கப் போறதில்லை, கேட்டாலும் கிடைக்காது”