”அடிவாங்குவ நான் என்ன அவளுக்கு வேலைக்காரனா”
”சீ சீ நீ அவளோட புருஷனாச்சே, வேலைக்காரனை விட ஒரு படி மேல தெரியுமா“
”ஆஹா இதை அப்படியே அவள்கிட்ட சொல்லு”
”ஓ சொல்றேனே” என காவேரியிடம் சொல்ல போனவனை தடுத்து இழுத்தான் கொம்பன்
சண்முகமோ தன் மகளிடம்
”என்னம்மா என்னாச்சிம்மா ஏன்மா அலர்ற”
”அப்பா கல்யாணம் ஆனதும் நான் சந்தோஷமா இருப்பேன்னு சொன்னீங்களே ஆனா இங்க அப்படியா நடக்குது, கொடுமை நடக்குதுப்பா, எனக்கு பெரிய கொடுமை நடக்குது” என சொல்ல அதைக்கேட்டு பதறினார்கள் கொம்பனின் பெற்றோர்கள்.
”அம்மாடி மருமகளே என்னாச்சிம்மா என்ன கொடுமை நடந்தது சொல்லும்மா”
”பாருங்க மாமா காபின்னு நான் வழக்கம் போல கேட்டேன், எப்பவும் எங்க வீட்டு வேலைக்காரிதான் காபி கொண்டு வந்து கொடுப்பா, அந்த பழக்கத்தில நான் காபி கேட்க உங்க பையன் காபி கொண்டு வந்து கொடுத்தாரு, கொடுத்துட்டு நான் என்ன உனக்கு வேலைக்காரனா, இதெல்லாம் என்கிட்ட வைச்சிக்காதன்னு சொல்லிட்டு” என இழுக்க
”என்னாச்சிம்மா சொல்லு”
”என்மேல காபியை கொட்டிட்டாரு பாருங்க அத்தை என் உடையை” என சொல்ல அனைவரும் பார்த்து அதிர்ந்தார்கள். அடுத்து அவர்களின் கோப பார்வையில் வெந்து போனான் கொம்பன்
”நான் இல்லை அவளேதான் காபியை வாந்தியெடுத்தா, நான் ஒண்ணும் கொட்டலை” என