”நல்ல வேளை சரி முதலிரவுல எப்படியெல்லாம் நடந்துக்கனும்னு உனக்கு தெரியும்ல இல்லை சொல்லித்தரனுமா”
”ஏன் உனக்கு தெரியுமா“
”எனக்கும் தெரியாது எனக்கென்ன அனுபவமா இருக்கு”
”பின்ன எதுக்கு அதைப்பத்தியே கேட்டு வைக்கற, என்னவோ உனக்கும் எனக்கும் முதலிரவு நடக்கற மாதிரி என் விரல் நகம் கூட உன் மேல படாது, கட்ட பிரம்மசாரியாவே இருப்பான் இந்த கொம்பன்” என சொல்லி முடிக்க அவளோ அவனை உன்னிப்பாக பார்த்துவிட்டு சத்தமாக
”மாமா அத்தை அப்பா எங்க இருக்கீங்க வாங்க வாங்க“ என அழைக்க அவனோ பயத்தில் தன் கையால் அவளின் வாயை பொத்தி இன்னொரு கையால் அவளை இழுத்து பிடித்தான்.
”கத்தாத ராட்சஸி” என சொல்ல அவளோ அவனது உள்ளங்கையை கடித்து வைக்க அதில் அவன் ஆஆ என வலியுடன் கையை எடுத்துக் கொண்டான்
”இப்ப என்னாச்சி பார்த்தியா உன்னோட பிரம்மசரியம் களங்கப்பட்டிருச்சி சும்மா வசனம் பேசாம அடுத்து ஆகற வேலையை பாரு” என மிடுக்காக சொல்லிவிட்டு அவள் சென்றுவிட கண்ணில் கண்ணீருடன் கணக்குபிள்ளையை பார்த்தான் கொம்பன்
”நண்பா ஏன்டா அழற”
”பாவி மவ என் பிரம்மசரியத்தை களங்கப்படுத்திட்டா சே எத்தனை வருஷம் நான் கட்டிக்காப்பாத்தி வைச்சிருந்த என்னோட கற்பை ஒரு நொடியில இல்லாம ஆக்கிட்டா எனக்கு கஷ்டமாயிருக்கு” என புலம்ப அவனை எப்படி ஆறுதல்படுத்துவது என தெரியாமல் திகைத்தான் கணக்குப்பிள்ளை.
தொடரும்...