”வெள்ளிக்கிழமை”
“அய்யோ உன்னோட கல்யாண நாள் நண்பா”
”அதை ஏன் நினைவுபடுத்தற, அதெல்லாம் ஒரு கல்யாணமா”
”சரி விடு ஆனது ஆச்சி நடந்ததை மாத்த முடியாது ஆனா நடக்கப் போறதை நீதான் பக்குவமா கையாளனும்“
”என்னடா சொல்ற, எனக்குப் புரியலையே”
”அய்யோ கொம்பா கல்யாணம் ஆன பின்னாடி உனக்கு என்ன நடக்கனும்”
“என்ன நடக்கனும்”
”முதலிரவு நண்பா” என சொல்ல அரண்டுப் போனான் கொம்பன்
”முதலிரவா எனக்கா”
”பின்ன எனக்கா உனக்குதானே இன்னிக்கு கல்யாணம் ஆச்சி, அப்படின்னா இன்னிக்கு உனக்குதான் முதலிரவு, அதுக்கான ஏற்பாடுகளை உன் மாமனார் செய்துக்கிட்டு இருக்காரு”
”அப்படியா இது என்னடா புது தலைவலி”
”எதுக்கும் நீ ஜாக்கிரதையா இரு கொம்பா, முதலிரவு அறையில என்ன வேணும்னாலும் நடக்கலாம், எதுக்கும் முன்னெச்சரிக்கையா இருந்தா நீ தப்பிப்ப இல்லாட்டி மாட்டிக்கிட்டு அல்லாடுவ”
”ப்ச் அய்யோ இந்த முதலிரவை எவன்டா கண்டுபிடிச்சான், அது இல்லாம வாழ முடியாதா” என கேட்க கணக்குப்பிள்ளையோ வியந்தான்