பேசியது. அதில் அவன் மனம் மாறி
”சரி சரி உங்க விருப்பம் போல இருக்கேன்” என சொல்ல அனைவரின் முகத்திலும் ஆனந்த தாண்டவம் வந்தது. காவேரியோ தனது உடையைப் பார்த்து வருந்தினாள் அதைக்கண்ட கொம்பனின் தாயோ
”அம்மாடி அதை மாத்திக்க, வேற உடையை உடுத்திக்க அதை தோய்ச்சிடலாம் கொடு”
”தப்பு செய்தவங்கதான் அந்த தப்பை சரியாக்கனும் அத்தை” என சொல்ல கொம்பன் உஷாரானான்
”அதுக்காக நான் உன் துணியை தோய்ப்பேன்னு நினைச்சியா முடியவே முடியாது” என உரக்க கத்தினான்.
5 நிமிடத்திற்கு பின் கொல்லை புறத்தில் இருந்த கிணற்றடியில் கறை படிந்த நைட்டியை சோப் போட்டு தோய்த்து கொண்டிருந்தான் கொம்பன், அவனுக்கு கிணற்றில் இருந்து தண்ணீரை இறைத்து அண்டாவில் நிரப்பிக் கொண்டிருந்தான் கணக்குபிள்ளை.
கொம்பனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது வந்த கோபத்தில் அந்த நைட்டியின் மீது காட்டினான், அதை போட்டு அடித்து துவைக்க கணக்குபிள்ளை அலறினான்
”கொம்பா அப்படி செய்யாத நைட்டி கிழிஞ்சது அதுக்கும் ஒரு பஞ்சாயத்து வைப்பாங்க, ஏதோ உனக்கு தோய்க்க தெரியாதுன்னு சொன்னியேன்னு கத்துக் கொடுத்தேன் அவ்ளோதான், எனக்கெல்லாம் தையல் வேலை தெரியாதுப்பா” என அலற அதில் கொம்பன் அமைதியாகி அந்த துணியை வெறித்துப் பார்த்தான்
”எதுக்கு அந்த துணியை அப்படி பார்க்கற இன்னுமா காபி கரை போகலை“
”அதெல்லாம் போயிடுச்சி என்னை இப்படி ஆக்கிட்டாளே, ஊருக்குள்ள சிங்கம் போல உலா வந்தேன், இங்க என்னடான்னா வண்ணான் வேலையை செய்ய வைச்சிட்டா உனக்குத் தெரியுமா, என் துணியை கூட நான் இதுவரைக்கும் தோச்சதில்லை தெரியுமா முதல்