(Reading time: 24 - 48 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

மாட்டேன்”

  

”அப்ப உன் அப்பா சொன்னா செய்வியா”

  

”யார் சொன்னாலும் செய்ய மாட்டேன், இந்த கொம்பனுக்கு அடிபணிஞ்சி போற பழக்கம் இல்லை”

  

”ஓ அப்படியா”

  

”ஆமாம் என்ன செய்வியோ செய்துக்க, உன் நினைப்பு என்னிக்குமே பலிக்காது” என சொல்ல உடனே காவேரி

  

”அய்யோ அம்மா இதை தட்டிக்கேட்க யாருமே இல்லையா, எனக்கு இப்படி ஒரு கஷ்டகாலம் வரனுமா, அய்யோ கடவுளே உனக்கு கண்ணில்லையா, யாருக்குமே காது கேட்கலையா” என சத்தமாக ஒப்பாரி வைக்க அவன் அரண்டே போனான்

  

”ஏய் முறைபொண்ணே எதுக்கு இப்படி ஒப்பாரி வைக்கற”

  

”பொறு கொம்பா எதுக்குன்னு இப்ப தெரிஞ்சிக்குவ, அய்யோ யாராவது வாங்களேன் இங்க நடக்கற அநியாயத்துக்கு நியாயம் சொல்லுங்களேன்” என மீண்டும் ஒப்பாரி வைக்க அந்த சத்தம் கேட்டு அனைவருமே ஓடிவந்து நின்றார்கள். கணக்குபிள்ளையோ கொம்பனிடம்

  

”கொம்பா என்னாச்சி ஏன் உன் முறைபொண்ணு இப்படி ஒப்பாரி வைக்குது, காபி கொடுக்கற சாக்குல அவள் கையை பிடிச்சி இழுத்துட்டியா என்ன எதுக்குதான் இப்படி அவசரப்படறியோ எல்லாத்துக்கும் காலம் நேரம் வேணாமா”

  

”அடேய் அரைவேக்காடு நீயா உளறாதடா, இங்க எதுவுமே நடக்கலை காபி ஆறிப்போச்சி, வேற காபி கொண்டான்னு சொன்னா”

  

”அவ்ளோதானே போ போய் கொண்டுவா”

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.