”ஏய் என்ன”
”எப்படி இந்த நாத்தத்தோட உன்னால இருக்க முடியுது”
”பழகிடுச்சி” என சொல்ல அவளோ அவனின் துணியை பார்த்தாள் ஆங்காங்கு சிறு சிறு முடிகள் இருக்கவே அதை எடுத்துப் பார்த்து
”இது உன்னோட தலைமுடியா”
”நாயோடது”
”அய்யே” என அருவெறுப்பாக பேச அவனோ
”ப்ச் போதும் நிப்பாட்டிக்க”
”நாய்களோட இருக்கியே அதுல என்ன உனக்கு கிடைச்சது, உனக்குன்னு இருக்கற பருத்தி ஆலையை பார்த்துக்கலாம்ல”
”எனக்கு எது பிடிக்குமோ அதைதான் நான் செய்வேன், எனக்கு இது பிடிச்சிருக்கு, பருத்தி ஆலைக்கென்ன அதை பார்த்துக்கதான் அப்பா அம்மா இருக்காங்களே அப்புறம் என்ன“
”என் அப்பாவுக்கு இப்பவே வயசாயிடுச்சி, அவருக்கு இருக்கற தென்னந்தோப்பு, மாந்தோப்பு எல்லாம் பார்த்துக்க இங்க ஆம்பளைங்க யாரும் இல்லை, எனக்கு வரப்போற புருஷன்தான் எல்லாம் பார்த்துக்கனும்னு எப்பவோ நான் முடிவு பண்ணிட்டேன், அதனால நீ என்ன செய்றன்னா இந்த நாய்களை பார்த்துக்கறதை விட்டுட்டு எங்க தோப்பை பார்த்துக்குவியாம், எங்கப்பாவுக்கு ஓய்வு தந்துடலாம் சரியா”
”முடியவே முடியாது வீட்டோட மாப்பிள்ளையா இருக்கறதே கொடுமை, இதுல உங்க தோப்புகளை நான் பார்த்துக்கனுமா சொல்லப்போனா உங்களை விட என்கிட்ட 3 மடங்கு