கொண்டா அதுவாவது சூடா கொண்டா போ” என சொல்ல அவனோ அவளை எரிப்பது போல பார்த்தான்
”என்னை ஏன் பார்க்கற போ போய் கொண்டா”
”நான் என்ன உனக்கு வேலைக்காரனா”
”இல்லையா, அதுக்குள்ள மறந்துட்டியா கொம்பா நீ என் புருஷன் எங்க அது இங்கதானே இருந்தது” என அவள் தன் கழுத்தில் இருந்த தாலியை தூக்கி அவனுக்கு காட்டி
”பார்த்தியா நீ கட்டின தாலி போதுமா”
”புருஷன்ங்கற நினைப்பு இருக்கு ஆனா, அவனை ஏன் வேலைக்காரன் போல வேலை வாங்கற”
”வேலைக்காரன் போலயா ஒரு காபி கேட்டது தப்பா”
”தப்புதான் உனக்கு வேணும்னா நீயே போய் காபி போட்டு குடி“
”ஓ அப்படியா”
”ஆமாம்” என வெடுக்கென சொல்ல அவளோ எழுந்து அவனை நெருங்கிப் பார்த்தாள், அவனுக்கு அதற்கே வேர்த்து கொட்டியது கூச்சத்தில் உடல் நெளிந்தான்
”என்ன செய்ற நீ தள்ளிப் போ”
”என்ன உன் மேல ஒரு மாதிரி நாத்தம் அடிக்குது”
”நாய்களோட இருக்கறதால அதுங்க வாசனை எனக்கு ஒட்டியிருக்கும்”
“உவ்வே“ என வாந்தி எடுப்பது போல செய்ய அவனுக்கு கோபம் வந்தது