(Reading time: 24 - 48 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”நண்பா வாழ்க்கையில எது இல்லையோ இது அவசியம் தேவை, இது இல்லைன்னா எப்படி வம்சம் பெருகும், உனக்கு வாரிசு வேணாமா உன் பேர் சொல்ல பிள்ளை வேணாமா” என கேட்ட நேரம் காவேரியின் குரல் கேட்டது

  

”கொம்பா கொம்பா எங்க இருக்க கொம்பா” என அழைக்க அதைக்கேட்ட கொம்பனோ

  

”எனக்கு எதுக்குடா வாரிசு, இதோ இருக்காப் பாரு என் பேரை வைச்சி எப்படி கூப்பிடறா பாரு, இது எல்லாம் யாருக்கும் தப்பா தெரியாது நான் செய்றது மட்டும்தான் தப்பா தெரியும்” என புலம்ப காவேரியே அவன் இருந்த இடம் நோக்கி வந்து நின்றாள்

  

”வாம்மா முறைப்பொண்ணே என்ன விசயம் இவ்ளோ தூரம் கஷ்டப்பட்டு நடந்து வந்திருக்க கால் வலிக்கப் போகுதும்மா உட்காரு” என நக்கலாக பேச அவளோ மென்மையாகச் சிரித்துவிட்டு

  

”ஒரு விசயம் சொல்ல வந்தேன் கொம்பா”

  

”என்ன விசயம் இப்ப எந்த துணியை நான் தோய்க்கனும்”

  

“தோய்க்கறதெல்லாம் நாளைக்கு பார்த்துக்கலாம் இன்னிக்கு முக்கியமான நாள் கொம்பா”

  

”என்ன நாள்”

  

”அட நமக்கு கல்யாணம் ஆன நாள்“

  

”அதுக்கு”

  

”இன்னிக்கி நைட் எங்கப்பா நமக்கு முதலிரவுக்கான ஏற்பாடுகளைச் செய்றாரு”

  

”அது ஒண்ணுதான் குறை இங்க”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.