கற்பகம் ஒன்றும் அப்பாவி இல்லையே. அதைப் புரிந்துக் கொண்ட போதும், அதில் அவளின் மனம் குளிரவில்லை. அறையின் உள்ளே வந்த சின்ன மருமகளிடம்,
“டிஃபன் சாப்பிட்டாச்சா?” எனக் கேட்டாள்.
“இல்லை அத்தை, எனக்கு பசிக்கலை, நான் மெதுவா சாப்பிடுறேன். நீங்க ஏதோ பேசனும்னு சொன்னீங்களே, சொல்லுங்க,” என்றாள் பாரதி!
அவளின் முகத்தை தன் பார்வையால் அளந்தாள் கற்பகம். பாரதியிடம் என்ன என்று விஷயம் அறிந்துக் கொள்ளும் ஆர்வம் மட்டும் தான் இருப்பதை புரிந்துக் கொண்டாள். அதே நேரம், உமா,
“சரி, நீங்க பேசுங்க. நான் தோட்டம் பக்கம் இருக்கிறேன்,” என்று சொல்லி கிளம்பினாள். ஒரு வினாடி தயங்கிய கற்பகம், பின்,
“இல்லை உமா, பரவாயில்லை நீயும் இங்கேயே இரு...” என்றாள்.
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தொடரும்...