”ப்ச் அதுக்கு ஏன் நாய் மாதிரி கத்தற, தூக்கத்திலதானே கைகால் போட்டேன், என்னவோ உன் மேல இருந்த ஆசையில போட்ட மாதிரி வள்ளுன்னு விழற, உனக்கு கஷ்டமாயிருந்தா என்னை தள்ளிவிட்டு நீ தூங்க வேண்டியதுதானே”
“ஏன் சொல்ல மாட்ட நேத்தும் இதே போல நீ என் மேல கைகால் போட்ட, நானும் உன் மேல கைபோட்டேன், பதிலுக்கு நீ என்ன செஞ்ச அருவாளால என் கழுத்தை கீறலை”
”நேத்து கதை நேத்தோட, இப்ப என்ன என் கையில அருவாளா இருக்கு இல்லைல்ல பேசாம தூங்கு, எனக்கு தூக்கம் வருது“
”அதென்ன நேத்து கதை நேத்தோட விளக்கம் சொல்லு”
”நேத்து முதலிரவு இன்னிக்குமா முதலிரவு”
“ஓஹோ நீ அப்படி வர்றியா ஏன் தினமும் முதலிரவு கொண்டாடக்கூடாதா என்ன நமக்குதான் கல்யாணம் ஆயிடுச்சே” என சொல்ல அவளோ கண்கள் மூடியபடியே
”டேய் கொம்பா, இதுபோல வில்லங்கமா யோசிச்சி அறிவுகெட்ட தனமா எதையாவது செய்து வைக்காத, அருவாள் இல்லைன்னா என்ன உன்னோட குரல்வலையை கடிச்சி துப்பிடுவேன், வாயை மூடிக்கிட்டு படுடா” என மிரட்ட அதில் அவன் அரண்டுப் போய்
”சே எப்படி பேசறா பாரு, இவளை போய் நான் கட்டிக்கிட்டேனே, எந்த ஜென்மத்தில நான் பாவம் செய்தேனோ இந்த ஜென்மத்தில இவள்கிட்ட மாட்டி கஷ்டப்படறேனே, ஈசனே இதுக்கு விமோசனமே இல்லையா”
”டேய் இன்னுமா நீ தூங்கலை தூங்குடா” என சொல்லியவள் அவன் மீது கைகால் போட்டு தூங்கத் தொடங்க அவனுக்கு தூக்கமே கெட்டுவிட்டது.
”சே இந்த மாதிரி இவள்கூட படுத்து எப்படி தூங்கறது, இதுக்கு பதிலா நாம தூங்காமலே இருக்கலாம்” என சொல்லிக் கொண்டே அவளை விட்டு எழுந்து நின்றான். அவளோ அந்த