”இருந்தது ஒரு காலத்துல எப்ப உன்னால என் வாழ்க்கை கேள்விக்குறியாச்சோ அப்பவே எனக்குள்ள இருந்த ஈவு இரக்கமெல்லாம் காணாம போயிடுச்சி”
”சே உன்னையா நான் கட்டிக்கிட்டேன், பெரிய தப்பு செய்துட்டேன் உன்னால அனுதினமும் நரகத்தை அனுபவிக்கிறதை விட ஒரேடியா நரகத்துக்கு போயிடலாம்”
”அப்படின்னா என்ன அர்த்தம் கோழையை போல சாகப்போறியா”
”இல்லை நான் ஒண்ணும் கோழையில்லை வீரனா வாழ்ந்துக் காட்டுவேன்“
”அப்புறம் என்ன போ”
”இருந்தாலும் நீ செஞ்சதை நான் மன்னிக்க மாட்டேன்”
”நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கலையே இப்படி வசனம் பேசறதை நிறுத்திட்டு வேற வேலை இருந்தா பாரு போ” என சொல்லியவள் வந்திருந்தவரை அனுப்பிவிட்டு வந்தாள்.
கொம்பன் கோபத்தில் கிணற்றடியில் அமர்ந்திருக்க கணக்குபிள்ளையோ காவேரியிடம் பேச வந்தான்
”என்னம்மா நீ இப்படி நடந்துக்கற கொம்பன் பாவம்மா”
”நான் என்ன செஞ்சேன்”
”நீ இந்த பணத்தை வாங்கியிருக்க கூடாது தப்பு செய்துட்ட”
”ஷ்ஷ் இந்த பணத்தை பாருங்க முதல்ல” என சொல்ல பணக்கட்டை அவனிடம் நீட்ட அவனோ