Page 13 of 26
”ஆமா என்ன நைட் ரூமுக்கே வரலை என்ன விசயம்“
”அப்படியே நான் வந்துட்டாலும் நீ என்ன செய்வன்னு எனக்குத் தெரியாதா”
”ஆமா கண்ணெல்லாம் சிவந்திருக்கு தூங்கலையா”
”ஆமாம்“
”ஏன்“
”யோசிச்சிக்கிட்டு இருந்தேன்“
”எதைப்பத்தி“
”ம் 20 லட்சத்தை சம்பாதிக்கறது எப்படின்னு”
”விடை கிடைச்சதா”
”இல்லை”
”அய்யோ பாவம்” என பொய்யாக அனுதாபப்பட்டு காபியை பருகிவிட்டு எழுந்து நின்றாள் அவனோ வெளியே செல்ல பின்னாடியே சென்றவள்
”கொம்பா இரு உன்கிட்ட ஒரு விசயம் சொல்லனும்” என சொல்ல அவனும் நின்றான்
”என்ன விசயம்”
”ஈசியா 20 லட்சத்தை சம்பாதிக்க ஒரு வழியிருக்கு செய்றியா”