நடந்த என் கல்யாணத்துக்கு செலவு செய்தீங்களா”
”அதுக்கு வாய்ப்பே தரலையே”
”அதுசரி உங்களை தப்பு சொல்லி பிரயோசனம் இல்லை இதோ இவளை சொல்லனும்” என சொல்லி காவேரியை பார்க்க அவளோ
”எதுக்கு என்னை குற்றம் சாட்டறீங்க நியாயமா பார்த்தா 7 கல்யாணமே உங்களாலதான் நின்னது அதுக்கு நஷ்ட ஈடு யாரு தருவா”
”அதுக்குன்னு 20 லட்சமா”
”அதுக்கென்ன செய்றது கல்யாணம்னா செலவு ஆகத்தான் செய்யும்”
”சரி விடு உனக்கு உங்கப்பா தர வேண்டிய வரதட்சணையா நினைச்சிக்கறேன் இதை இப்படியே விட்டுடு” என்றான் பெருந்தன்மையாக
”என்னது வரதட்சணையா எந்த உலகத்தில இருக்க நீ, வரதட்சணை வாங்கறதும் குற்றம் தர்றதும் குற்றம், உனக்கெல்லாம் ஒத்த பைசா வரதட்சணை தரமுடியாது, எங்கப்பா கூட நடக்காத கல்யாணத்துக்கு செலவுதான் செய்தாரே தவிர யாருக்கும் வரதட்சணை தரேன்னு சொன்னதில்லை இப்படியா வரதட்சணை வாங்கி பிழைப்பீங்க என்ன மாதிரியான ஆளு நீங்கலாம் சே”
”போதும் நிப்பாட்டு, விட்டா ஒரேடியா பாட்டு பாடற, சரிம்மா தப்பா பேசிட்டேன் நாங்களும் வரதட்சணை எதிர்பார்க்காதவங்கதான்”
“அப்புறம் ஏன் அப்படி பேசின”
”தெரியாம பேசிட்டேன் தாயே போதுமா”
”ஆமா பேசறதை பேசிட வேண்டியது அப்புறம் மாட்டிக்கிட்டா உடனே சரண்டர் ஆக