”ஓஹோ சரி சரி இரு நானும் வரேன்” என சொல்லி அவனும் குளிக்கச் சென்றான்.
கொம்பனோ டிபன் சாப்பிட வர அவனுக்கு சண்முகமே பரிமாறினார் அன்பாக
”உங்களுக்கு எதுக்கு மாமா வீண் சிரமம்”
“இதுல என்னப்பா சிரமம் இருக்கு, நீ என் வீட்டு மாப்பிள்ளை எனக்கு மகன் இல்லாத குறையை போக்க வந்திருக்க, உனக்கு இதுகூட செய்யலைன்னா எப்படி”
”இவ்ளோ அன்பா பேசறீங்களே, உங்க பொண்ணு என் விசயத்தில செய்றது எல்லாம் தப்புன்னு தோணலையா”
”தெரியுதுப்பா அவள்கிட்ட சொல்லிப்பார்த்தேன் ஆனா அவள் என்னடான்னா உன்னை பழிவாங்கற எண்ணத்திலயே இருக்காளே”
”எப்பதான் அவள் மாறுவா”
”காலமே அதுக்கு பதில் சொல்லும் ஆமா எங்க கிளம்பிட்ட”
”வேற எங்க உங்க சொத்துக்களை பராமரிக்கனும்ல அதுக்குதான்”
”நான் வேணா உங்ககூட வரட்டுமா மாப்பிள்ளை”
”வேணாம் மாமா நீங்க ஓய்வு எடுங்க”
”இருக்கட்டும்பா வீட்லயே இருக்கறது என்னமோ போல இருக்கு நானும் வரேன்”
”ஆனா இதுக்கு உங்க பொண்ணு என்ன சொல்வாளோ“
”அவள்ட்ட நான் பேசிக்கிறேன் நீங்க சாப்பிடுங்க மாப்பிள்ளை” என சொல்ல அவனுக்கு