சற்று நிம்மதியாகிப் போனது.
கணக்குபிள்ளையும் வர அவனும் சாப்பிட்டு முடித்தான். கொம்பன் அவனது நண்பன் சண்முகம் ஆகிய மூவரும் தயாராகி கிளம்ப காவேரி வந்தாள்
”எங்கப்பா போறீங்க”
”மாப்பிள்ளை கூட போறேன்”
”நீங்க ஓய்வு எடுங்கப்பா, எதுவாயிருந்தாலும் அவரே பார்த்துக்கட்டும் அவருக்குதான் எல்லாமே நல்லா தெரிஞ்சிருக்கே விடுங்கப்பா” என கோபமாக பேச கொம்பனோ கோபம் கொள்ளாமல் அவளை ஏற இறங்கப் பார்த்தான் அதைக்கண்ட கணக்குப்பிள்ளையோ
”எப்பா கொம்பா உன் முறைபொண்ணு உன்னை திட்டுது நீ என்னடான்னா அவளை ரசிக்கற என்ன நடக்குது இங்க”
”ப்ச் சும்மாயிரு” என அதட்டினான் காவேரியோ கொம்பனை பார்க்க அவனோ அவளை ரசிப்பதைக்கண்டு வெகுண்டாள்
”அம்மாடி வீட்ல இருந்து இருந்து அலுப்பா இருக்கு, எவ்ளோ நேரம்தான் ஓய்வே எடுக்கறது முடியலைம்மா, அதான் மாப்பிள்ளை கூட போறேன் அவரே எல்லாம் செய்யட்டும், நான் சும்மா வேடிக்கை பார்க்கிறேன் போதுமா” என சொல்ல அவளும் சரியென தலையாட்டினாள்.
ஆனால் கொம்பனோ
”மாமா எனக்கு வீட்ல முக்கியமான வேலையிருக்கு அதை முடிச்சிட்டு நான் வந்துடறேன் நீங்க வேணா என் நண்பனோட கிளம்பறீங்களா” என சொல்ல அதற்கு அவர் சரியென தலையாட்ட கணக்குபிள்ளை குழம்ப காவேரியோ அதிர்ந்தாள்
”ஒண்ணும் வேணாம் நீயும் கிளம்பு போ”