மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 30 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
"சொல்லுங்க அஹல்யா! இது எல்லாமே genuine படமா தான் தெரியுது. சாஃப்ட்வேர் எதுவும் பயன்படுத்தினதுக்கான தடயம் எதுவும் இல்லை," என மீண்டும் கேட்டான் தென்றல்வாணன்.
“எனக்குத் தெரியலை இன்ஸ்பெக்டர் சார்,” என்றாள் அஹல்யா குழப்பத்துடன்.
“இந்த போட்டோஸ் எல்லாம் கிஃப்ட்டா நீங்க அவனுக்கு கொடுத்தது தானே?”
“நானா?? நோ, நோ இன்ஸ்பெக்டர்.”
“இதுக்கு மேலேயும் பொய் சொல்லி எதுவும் ஆகப் போறதில்லை அஹல்யா. என்ன நடந்துச்சுன்னு நான் சொல்றேன். நீங்க புது ஊருக்கு வந்தீங்க. தனியா இருக்க உங்களுக்கு சேகரன் உதவி செய்தான். அவனை நல்லவன்னு நம்பினீங்க. பேசுனீங்க. எல்லை மீறி பழகுனீங்க. ஏதோ காரணத்துக்காக சில நாளுக்கு அப்புறம் அவனை அவாயிட் செய்ய முடிவு செய்தீங்க. அவனை வரக் கூடாதுன்னு விரட்டுனீங்க. போலீஸ் வச்சுக் கூட மிரட்டுனீங்க. அவன் உங்களை விடுறதா இல்லை. ஊரெல்லாம் உங்களை பத்தி தப்பா, ஹுஹும், உண்மையா பேசினான். அன்டைம்ல உங்க வீட்டுக்கு வந்து தொல்லை செய்தான். இதை சவீதாவும் பார்த்திருக்காங்க. அதே மாதிரி அந்த ஸ்பெசிஃபிக் நைட்டும் சேகரன் வந்திருக்கான், உங்க கிட்ட தப்பா பேசி இருக்கான். நடந்தும் இருக்கான். அப்போ எதிர்பாராமல் நீங்க அடிச்சதுல அவன் இறந்துட்டான். உண்மை தெரிஞ்சா என்ன ஆகும்னு பயந்து, அவனை பைக்ல கட்டி வச்சு எடுத்துட்டுப் போய் ஆக்சிடன்ட் மாதிரி காட்டிட்டீங்க.”
“இன்ஸ்பெக்டர் சார்!!!”
அஹல்யா பேசியதை சட்டை செய்யாமல்,
“தனியா இருக்குறதால வெயிட்டான மளிகை சாமான்களை வீட்டுக்குள்ளே கொண்டுப் போக வீல்ஸ் இருக்க தள்ளுவண்டி நீங்க வச்சிருக்குறது எனக்கே தெரியும். ஸோ, சேகரனை வண்டி வரைக்கும் கொண்டு வந்து சேர்க்குறது உங்களுக்கு கஷ்டமான வேலை கிடையாது. இட் ஆல் மேக்ஸ் சென்ஸ்,” என்றான் தென்றல்வாணன்.