அபினவ்.
“இல்லை அபினவ். எனக்கு ரொம்ப பயமா இருக்கு. இன்ஸ்பெக்டர் ஏதேதோ போட்டோ எல்லாம் காட்டி நான் தான் கொடுத்தேன்னு சொல்றார். அந்த மாதிரி போட்டோஸ் பார்த்ததா கூட எனக்கு ஞாபகம் இல்லை.” அஹல்யா அழாத குறையாக சொன்னாள்.
“இப்போ எதையும் யோசிக்காதே அஹல்யா. வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடு. மெதுவா பேசிக்கலாம்.”
“இல்லை, எனக்கு அந்த வீட்டுக்குப் போகவே பிடிக்கலை. பயமா இருக்கு அபினவ்.”
அஹல்யா நடுக்கத்துடன் சொல்லவும், அபினவ் என்ன செய்வது என்று புரியாமல் விழித்தான்.
உடனே சத்யா ஆக்ஷனில் இறங்கினாள்!
“அந்த வீடு பிடிக்கலை, அவ்வளவு தானே அஹல்யா! அதை விடுங்க, என்னோட வீட்டுல ஒரு போர்ஷன் காலியா இருக்கு. அங்கே வாங்க,” என்றாள் சத்யா.
“உங்க வீடா? இன்ஸ்பெக்டர் கோபப்படுவாரேக்கா,” என தயங்கினான் அபினவ்.
“அவரை நான் சமாளிச்சுக்குறேன். இப்போ உடனே வேற எங்கே போய் வீடு தேடுவ அபி?”
சத்யா சொல்வதன் பின் இருக்கும் உண்மை அபினவிற்கும் உரைத்தது. ஏற்றுக் கொண்டவனாக சத்யாவிடம் தலை ஆட்டியவன், அஹல்யாவிடம்,
“அக்கா சொல்றதும் சரி தான் அஹல்யா. நீ உனக்கும் அருணுக்கும் இப்போதைக்கு வேண்டியதை சின்ன பேக்ல எடுத்து வை. நான் லாயர் சாரை ட்ராப் செய்துட்டு வரேன். சேர்ந்து சத்யாக்கா வீட்டுக்கு போகலாம்,” என்றான்.
“வாடகை எவ்வளவுன்னு நீங்க சொல்லலையே?” அஹல்யா தயக்கத்துடன் சத்யாவிடம் கேட்டாள்.