(Reading time: 8 - 16 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

தென்றல்வாணன் பேசி முடிக்க காத்திருக்காமல் அவனின் பேச்சில் குறுக்கிட்டார் குணாளன்.

  

“நீங்க என்ன கதையா இன்ஸ்பெக்டர் எழுதுறீங்க? இவங்க தப்பு செஞ்சாங்கன்னு அடிச்சு சொல்ற மாதிரி உங்க கிட்ட சாட்சி ஏதாவது இருக்கா??? மத்தபடி வாரன்ட் இல்லாம, முழு விபரமும் சொல்லாம எப்படி நீங்க பாட்டுக்கு ஸ்டேஷனுக்கு வர சொல்லி விசாரிப்பீங்க???”

  

“இதோ பாருங்க சார். புது லீட் கிடைச்சிருக்கு. சீக்கிரமே நீங்க கேட்குற சாட்சியும் கிடைக்க தான் போகுது!”

  

“இதை அப்படியே உங்களால ஜட்ஜ் கிட்ட சொல்ல முடியுமா??? வெறும் பெயருக்கு இருக்க சூழ்நிலை சாட்சியத்தை வச்சுட்டு இப்படி தொல்லை செய்றீங்க??? நீங்க சொல்ற மாதிரி ஏதாவது ஸ்ட்ராங் எவிடென்ஸ் கிடைச்சா எனக்கு ஃபோன் செய்து சொல்லுங்க. நானே அவங்களை ஸ்டேஷனுக்கு அழைச்சுட்டு வரேன். அடுத்த தடவை மறக்காம வாரன்ட்டும் வாங்கிட்டு சொல்லுங்க!”

  

தென்றல்வாணன் முகம் கோபத்தில் சிவந்தது.

   

“நீங்க கேட்குற எவிடன்ஸோடவே உங்களை சந்திக்கிறேன் லாயர் சார். இன்னும் ஒரு சில நாள்லேயே நாம திரும்ப பேசுவோம். அப்போ உங்களுக்கு நான் பதில் சொல்றேன்,” என்றான் அவன் கோபத்துடன்!

  

🌼🌸❀✿🌷

   

க்தி, சத்யா, அருண், அபினவ், அஹல்யா, குணாளன் என அனைவரும் ஒன்றாக ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்தார்கள்.

  

அஹல்யா உடைந்துப் போனவளைப் போல தோன்றினாள்.

  

“அஹல்யா, எல்லாம் சரியாகிடும் கவலைப் படாதே!” மென்மையாக அவளிடம் சொன்னான்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.