”சரியான சிடுமூஞ்சி, பொண்ணுங்கன்னாலே வெறுப்பு ஆம்பளை திமிரு, ஆம்பளைங்க தப்பே செய்தாலும் திட்டாது, சிரிக்கவே தெரியாத ஜென்மம், ஆணாதிக்கம் பிடிச்சவன்”
”பரவாயில்லையே பல பட்டபெயர்களை அவருக்கு வெச்சிருக்க போல”
”நீயும் அவரை பார்த்தா பட்டப்பெயர் வைப்ப, அந்தாளுகிட்ட ஜாக்கிரதையா இரு ஆனா கொஞ்சம் அழகாயிருப்பான், இன்னும் கல்யாணம் ஆகலை” என சொல்ல அதைக்கேட்டு வியந்தாள் கண்ணகி
”அவருக்கு கல்யாணம் ஆகாதது உனக்கு பெரிய கவலை போல”
”அப்படியில்லை கல்யாணம் ஆயிட்டா வீட்டு பிரச்சனையில மூழ்கி கம்பெனியில இருக்கறவங்களை டார்ச்சர் பண்ண மாட்டாரு அதான்“
”கனவு காணாத கல்யாணம் ஆனவங்கதான் வீட்டு பிரச்சனையை வேலை செய்ற இடத்தில கொட்டுவாங்க“
”அப்ப அவருக்கு இந்த ஜென்மத்தில கல்யாணமே ஆகவேணாம்” என சொல்ல அதைக்கேட்டு கண்ணகி கலகலவென சிரிக்க கூடவே மாதவியும் சிரித்தாள்.
மறுபக்கம் கோவலன் தன் வீட்டில் தன் தாத்தாவுடன் தர்க்கத்தில் இருந்தான்
”யாரை கேட்டு இந்த முடிவு எடுத்தீங்க தாத்தா” என எரிந்துவிழுந்தான் கோவலன் அதற்கு ஈஸ்வரமூர்த்தியோ
”நான் யாரை கேட்கனும் அந்த கல்லூரி என்னோடது” என்றார் கெத்தாக
”ஆனா அந்த கல்லூரிக்கு நான்தானே தாளாளர்”