“கொம்பா என்ன சேட்டை செய்ற நீ”
”நானா நான் என்னடா செய்தேன்”
”எதுக்கு என் கன்னத்தை எச்சிப் பண்ற”
”யாரு நானா இல்லையே”
”நீதான்”
”இல்லை” என சொல்ல காவேரியோ
”அண்ணா கொம்பன்தான் உங்க கன்னத்தில முத்தம் கொடுத்தான் நான் பார்த்தேன்” என்றாள் அதைக்கேட்டு அதிர்ந்த கொம்பனோ அவளையும் கணக்குபிள்ளையையும் மாறி மாறிப் பார்த்தான் கணக்குபிள்ளையோ
”வர வர உன் தொல்லை தாங்க முடியலை, விடிய விடிய கனவு காண வேண்டியது விடியறப்ப சேட்டை பண்ண வேண்டியது, அதான் உனக்குன்னு ஒருத்தி வந்துட்டாள்ல அவள் கன்னத்தை போய் எச்சி பண்றதுதானே, நான்தான் கிடைச்சேனா உனக்கு, சே இந்த வீட்ல நிம்மதியா தூங்க கூட முடியலை, வேற இடம் பார்த்துதான் தூங்கனும்” என புலம்ப அதைக்கேட்ட காவேரியோ
”அண்ணா நீங்க ஏன் கஷ்டப்படறீங்க இந்த வீட்ல என்ன ரூம்களா இல்லை, உங்களுக்கு எந்த ரூம் பிடிச்சிருக்கோ அதை எடுத்துக்குங்க, மாடியில கூட ரூம்கள் இருக்கு வேணா அங்க போய் தங்கிக்க அண்ணா”
”அப்படியா தங்கச்சி ரொம்ப சந்தோஷம்மா, கொம்பனால என் தூக்கம் கெட்டது நான் போய் எனக்குன்னு ஒரு ரூம் பார்த்து தூங்கறேன், இவனை நீயே பார்த்துக்க” என சொல்லிவிட்டு கணக்குபிள்ளை அங்கிருந்து அவசரமாக சென்றான்.