(Reading time: 27 - 54 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

அவன் செல்லவும் கொம்பன்

  

”டேய் இருடா என்னடா என்னை தனியா விட்டுட்டுப் போற நான் பாவம்லயா இரு நானும் வரேன்” என அலறியபடியே எழுந்தவனை தடுத்தாள் காவேரி

  

”இரு கொம்பா என்ன அவசரம் ஆமா எந்த நினைப்பில நீ உன் நண்பனுக்கு முத்தம் கொடுத்த என்னை நினைச்சி கொடுத்தியா” என்றாள் ஆர்வமாக

  

”ஆமா உன்னை பகல் பொழுதிலியே நினைக்க கஷ்டமாயிருக்கு, உன்னால எந்த நேரத்தில எப்படிபட்ட கஷ்டம் வருமோன்னு பயப்பட வேண்டியிருக்கு, இதுல தூங்கறப்ப வேற உன்னையே நினைக்கனுமாக்கும்”

  

”பின்ன யாரை நினைச்சி முத்தம் கொடுத்த”

  

”யாரையும் நினைக்கலை என்னவோ அன்புமிகுதியில தந்தேன், இதையெல்லாம் போய் கேள்வியா கேட்டுக்கிட்டு பாரு ஆம்பளை போல வக்கனையா கால்மேல கால் போட்டுக்கிட்டு உட்கார்ந்துக்கிட்டு இருக்க”

  

”ஏன் ஆம்பளைங்கதான் கால் மேல கால் போட்டு உட்காரனுமா என்ன”

  

”ஆமாம் ஆம்பளைங்க எப்பவும் கெத்தா உட்காரனும், பொம்பளைங்க இதுபோல உட்கார கூடாது தப்பு, இன்னும் சொல்லனும்னா பொம்பளைங்க ஆம்பளைங்க முன்னாடி உட்காரவோ நின்னு பேசவோ கூடாது”

  

”ஆணும் பெண்ணும் சமம்னு உனக்கு யாரும் சொல்லித்தரலையோ, எந்த விதத்தில பொம்பளைங்க ஆம்பளைங்களை விட குறைஞ்சிட்டாங்க”

  

”நிறைய விசயங்கள்ல”

  

”அதான் என்ன“

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.