”ஆம்பளைங்க நாங்க இஷ்டப்படி நடந்துக்குவோம், எங்க வேணா போய் வருவோம் ராத்திரி பொழுதுலகூட தெருவில பயமில்லாம அலைவோம், அதுபோல உங்களால முடியுமா”
”ஏன் முடியாது எங்களாலயும் பயமில்லாம அலையமுடியும் ஆனா அதுக்கு உங்களை போல ஆம்பளைங்க விடறதில்லையே, கெட்ட குணம் படைச்ச ஆம்பளைங்க இருக்கறதாலதான் பொம்பளைங்களுக்கு பாதுகாப்பு இல்லாம போயிடுச்சி”
”எல்லா ஆம்பளைங்களும் அப்படியில்லை சில நல்லவங்களும் இருக்காங்க”
”இருக்கலாம் ஆனா அவங்களை தேடி கண்டுபிடிக்கனும்”
”எவ்ளோ பெரிய பிரச்சனை வந்தாலும் நின்னு அதை தீர்த்து வைக்கறது ஆம்பளையோட துணிச்சல், அதுக்காக அடிதடி சண்டை பிரச்சனை கேஸ் கோர்ட்டுன்னு எவ்ளோ எல்லை வரைக்கும் போய் வருவாங்க, உங்களால அது முடியுமா”
”பிரச்சனையை உருவாக்கறதே ஆம்பளைங்கதானே அப்ப ஆம்பளைங்க எல்லை தாண்டறது ஒண்ணும் தப்பில்லையே, எங்கயாவது பொம்பளைங்களால பிரச்சனை வந்திருக்கா எல்லா இடத்திலயும் அவங்க இறங்கி போவாங்க, விட்டுக்கொடுப்பாங்க உங்களை போல உச்சானி கொம்புல ஏறி நிக்க மாட்டாங்க”
”சில பொம்பளைங்க இருக்காங்க வீட்டு மானத்தையே வீதிக்கு கொண்டு வருவாங்க”
”வீட்டை பராமரிக்கறவளே பொம்பளைதான், அந்த வீட்ல ஒரு அங்கமா இருக்கறது ஆம்பளை, அவன் சரியில்லாத காரணத்தால சில பெண்களோட மானம் வீதிக்கு வருது அதுக்கும் காரணம் ஒரு ஆம்பளையாதான் இருக்குமே தவிர நிச்சயமா பொம்பளையா இருக்காது”
”10 ஆம்பளைங்க இருக்கற இடத்தில ஒரு சண்டை சச்சரவு கூட வராது ஆனா 2 பொம்பளைங்க ஒரு இடத்தில இருந்தா போதும் சண்டைக்கு பஞ்சமிருக்காது”