காலியாக இருந்தது, ஏதோ கொண்டு வரவேண்டுமே என்பதற்காக கொண்டு வந்திருந்தார்கள், அதைக்கண்ட கண்ணகி கோவலனைப் பார்த்து முறைக்க அவனோ விழித்தான்
”என்னை ஏன் முறைக்கற இதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை இரு இரு என்ன ஏதுன்னு விசாரிக்கறேன்” என சொல்லியவன் சிலம்புவிடம்
”சிலம்பு என்ன இதெல்லாம் பாடம் எடுக்கறியா இல்லையா ஏன் ஒரு மாணவன்கிட்டயும் நோட் புக் இல்லை” என கேட்க சிலம்புவோ கோவலனை தனியாக அழைத்துக் கொண்டு சென்று
”நண்பா தப்பா நினைக்காத, மாணவர்களுக்கு படிப்பு ஏறலை எவ்ளோதான் நானும் சொல்லிக் கொடுக்கறது கஷ்டமாயிருக்கு”
“அதுக்கு பாடம் எடுக்கலையா நீ அப்போ செமஸ்டர் எக்ஸாம் என்னாகிறது”
“ஒண்ணும் ஆகாது நான் விசாரிச்சிட்டேன்”
”என்னத்த விசாரிச்ச”
”யூனிவர்சிட்டியில விசாரிச்சிட்டேன் கேள்விதாள் இந்த முறை யார் தயாரிக்கறாங்கன்னு”
”அதுக்கு”
”ஆள் ரெடி, கேள்விதாள் ரெடியானதும் ஒரு காப்பி நம்ம காலேஜ்க்கு வந்துடும் அதுக்காக பணம் கூட கேட்டாங்க, நான் பேரம் பேசி ரெடி பண்ணிட்டேன்”
”எப்படி”
”என்ன செய்றது மாணவர்கள்கிட்ட கேட்டு பணம் புரட்டிட்டேன், ஒவ்வொரு மாணவன்கிட்ட இருந்தும் 5000 ரூபாய் வாங்கியாச்சி 5 சப்ஜக்ட்டுக்கு ரெடியா கேள்விதாள் வந்துடும் அதை