இவங்களுக்கு கொடுத்துட்டா போதும், எல்லாரும் பாஸாயிடுவாங்க”
”இது என்னவோ தப்பா படுது சிலம்பு பணம் கொடுத்து கேள்விதாளை வாங்கறதா யாரை கேட்டு இப்படி செய்த”
”எல்லாமே மாணவர்களோட நன்மைக்காகதான் புரிஞ்சிக்க நண்பா” என சொல்ல மறுபக்கம் கண்ணகி ஒரு மாணவனை பிடித்து கண்டித்தாள், திட்டினாள், அதட்டினாள், மிரட்டினாள் அதன் பலனாக அந்த மாணவன் பயந்து உண்மையை உளறினான், அதில் அவளுக்கு அதிர்ச்சி
”என்னது பணம் கொடுத்தீங்களா எவ்ளோ”
”5 சப்ஜெக்டுக்கும் சேர்த்து 5000 ரூபாய் கொடுத்தோம் சும்மா கத்தாதீங்க”
”யார் கிட்ட கொடுத்தீங்க”
”சிலம்பரசன் சார்கிட்ட” என சொல்லிவிட கண்ணகியின் கோபப்பார்வை சிலம்புவை பொசுக்கியது. அவனோ கோவலனை பிடித்துக் கொண்டான்
”நண்பா என்னை காப்பாத்து, நான் நல்லதுதான் செய்தேன் ப்ளீஸ்” என சொல்ல அந்நேரம் கோவலன் அந்த பேச்சை கேட்டு மனம் இரங்கி கண்ணகியிடம் வந்தான்
”இதப்பாரு நடக்கறது எல்லாமே காலேஜோட நண்மைக்காகதான் நடக்குது, இதை இப்படியே விட்டுடு அவங்க என்ன செய்றாங்களோ செய்யட்டும்”
”அப்படியெல்லாம் விடமுடியாது சார் பணம் கொடுத்து கேள்வித்தாளை வாங்கறதா இது அநியாயம்”
”ப்ச் கொஞ்சம் அமைதியா யோசிச்சிப்பாரு மாணவர்கள் பாஸாயிடுவாங்க”
”அதுக்கு இதுதான் வழியா சே பணத்தாசை பிடிச்சவங்களா இருக்கீங்களே”