”நீயில்லாம அவரு ஏதாவது செய்துக்கிட்டா“
”செத்தா சாகட்டும் எனக்கு என் வாழ்க்கைதான் முக்கியம், அவனுக்கு அவன் வாழ்க்கை முக்கியம்னு பட்டா புது வாழ்க்கையை அமைச்சிக்கட்டும் என்கிட்ட அவன் வரவேணாம்”
”அப்ப நீ வேங்கையனை வேணாம்னு சொல்றியா”
”ஆமாம்”
”சத்தியமா”
”என் மேல சத்தியமா சொல்றேன் எனக்கு வேங்கையன் வேணாம்” என சொல்லி அவளுக்கு அவளே தலைமேல் கைவைத்து சத்தியம் செய்ய மஹதியோ
”அப்போ நான் வேங்கையனை கல்யாணம் செய்துக்கவா” என ஆசையாகக் கேட்க அவள் அதிர்ந்தாள்
”உனக்கென்ன புத்தி கெட்டுப்போச்சா உனக்கும் வேங்கையனுக்கும் எவ்ளோ வித்தியாசம் இருக்கு தெரியுமா”
“மனபொருத்தம்தான் முக்கியம் ஜானு, எனக்கு வேங்கையனை ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள் வெட்கத்துடன்
”உனக்கு வேங்கையன் மேல இருக்கறது விருப்பம் இல்லை பரிதாபம்“
”எதுவோ ஒண்ணு நீ அவரை வேணாம்னு சொல்லிட்ட நான் ட்ரை பண்ணிக்கிறேனே”
”சரி செய்“
”சத்தியமா”