நல்லாதா போச்சி, ரொம்ப தேங்ஸ் ஜானு, நான் மூர்த்திகிட்ட மாட்டாம தப்பிச்சிட்டேன், சரி சரி என்ன இங்கயே வருத்தப்பட்டு நிப்பியா, உன்னை உன் மூர்த்தி மாமா தேடப்போறாரு, காபி போட்டியா இல்லையா அவருக்கு போ போ” என சொல்ல அவளோ
”எனக்கும் மூர்த்தி மாமாவுக்கும் கல்யாணம் ஆகட்டும் அப்புறம் பாரு அவரையும் அந்த குடும்பத்தையும் எப்படி என் வழிக்கு மாத்தறேன்னு”
”நீ சொல்றது நடக்குமான்னு தெரியலை, ஆல்தபெஸ்ட் ஜானு” என்றாள் அந்நேரம் மூர்த்தி காபி என அலற அதில் ஜானகி பதட்டமாகி காபி போடச் சென்றாள்.
மஹதியும்
”அய்யோ பாவம் ஜானு” என சொல்லிக் கொண்டே வந்தவள் வேங்கையனை பார்த்தாள்
”நீங்க என்ன இங்க“
”என்னாச்சி ஜானகிக்கு இவ்ளோ பதட்டமா இருக்காளே”
”ஒண்ணுமில்லை மூர்த்தியை பார்த்துக்கறதுல பிசியா இருக்கா சரி அவளை விட்டுத்தள்ளுங்க உங்க மனசுல யார் இருக்கா”
”இது என்ன கேள்வி ஜானகிதான்“
”அது நான் வராதவரைக்கும் இப்ப நான் வந்துட்டேன்ல இப்ப சொல்லுங்க உங்க மனசுல யார் இருக்கா”
”என்ன நீ இப்படி புதுவிதமா பேசற” என சொல்ல அவளோ கண்சிமிட்டினாள் அதைக்கண்டதும் புரிந்துக் கொண்டவன்
”என் மனசுல நீ மட்டும்தான் இருக்க” என சொல்ல மஹதி மகிழ்ந்து அவனை