“அவளுக்கு பணம் சொத்து மேல ஆசையில்லை, மூர்த்தி மேலதான் ஆசை, ஆனா மூர்த்திக்கு அவள் மேல துளியும் ஆசையில்லை, ஏதோ முறைப்பொண்ணுன்னு பழகறான் அவ்ளோதான்”
“சரி அவருக்கு ஏன் நீங்க வேற பொண்ணை பார்க்கலை“
”எல்லாம் பார்த்தோம், எல்லா இடத்திலயும் தப்புத்தப்பா புரளி பேசி கெடுத்து விட்டா அந்த ஜானகி இல்லைன்னா திருச்சியில அருமையான சம்பந்தம் வந்தது அவனுக்கு, அது மட்டும் கிடைச்சிருந்தா நல்லாயிருந்திருக்கும்”
”ஓஹோ அப்படியா சரி வேங்கையனுக்குதான் நான் இப்ப வந்துட்டேன்ல, வேங்கையனும் என்னை ஏத்துக்கிட்டாரு, அதே போல அவரோட அப்பா அம்மாவுக்கும் என்னை பிடிச்சிப் போச்சி, ஜானகிக்காகதான் நான் காத்திருக்கேன், அவள் ஒதுங்கிட்டா அடுத்த நாளே நான் வேங்கையனை கல்யாணம் செய்துக்குவேன்”
”அப்படி மட்டும் செய்யாதம்மா உனக்கு புண்ணியமா போகும்”
“ஏன் இப்படி சொல்றீங்க”
”இதப்பாரு ஜானகி வேங்கையனுக்கே இருக்கட்டும், அவளை எல்லாம் என் வீட்டு மருமகளா என்னால ஏத்துக்க முடியாது, உன்னைப் பாரு மகாலட்சுமி போல மங்களகரமா இருக்க, நீ எதுக்கு இரண்டாந்தாரமா வாக்கப்படனும்னு ஆசைப்படற, வேணாமே என் பையனை கல்யாணம் செய்துக்க”
”நானா அய்யோ அப்புறம் நானும் உங்க வீட்டுக்கு வந்தா நிறைய வேலைகள் செய்யனும்ல”
”ஆமாம் செய்யனும், அதை வேலைகளா நினைக்காத கடமையா நினை, இத்தனை வருஷம் நான் செய்தேன் இனி நீ செய்“
”அய்யோ வேணாம் நான் வேங்கையனை விரும்ப ஆரம்பிச்சிட்டேன், என்னால அவரை மறக்க