”என் முன்னாடியே கேளு வா” என அவனை அழைத்துக் கொண்டு சென்றார்
பிரின்சிபால் அறையில் கண்ணகி மாதவியிடம் கல்லூரி பற்றி விளக்கம் சொல்லும் போது இவ்விருவரும் உள்ளே வந்தார்கள்.
”கண்ணகி இவன் ஏதோ உன்கிட்ட சொல்லனுமாம்” என ஈஸ்வரமூர்த்தி சொல்ல கண்ணகி கோவலனைப் பார்க்க அவனோ கைகூப்பி
”என்னை மன்னிச்சிடு உன்னை நிர்கதியில விட்டதுக்கு” என சொல்ல அவளோ
”சரி உங்களை நான் மன்னிச்சிட்டேன்” என்றாள் இயல்பாக
”என் மேல கோபம் இல்லையா உனக்கு, என்னை தி்ட்டுவன்னு எதிர்பார்த்தேனே”
”இல்லை உங்க மேல எனக்கு கோபம் வரலை வருத்தம்தான் வருது”
”வருத்தமா எதுக்கு”
”உங்களால யாருக்கும் பிரயோசனம் இல்லை அதை நினைச்சிதான்” என சொல்ல அவனுக்கு அவமானமாகிப் போனது. மாதவியோ கோவலனை கேவலமாக பார்த்து வைத்தாள் ஈஸ்வரமூர்த்தியோ கோவலனிடம்
”கிளம்பு இங்க நின்னா இன்னும் அவமானப்படுவ” என சொல்ல அவனோ தலைகுனிந்து அவமானத்தில் அங்கிருந்து தன் கம்பெனிக்கு சென்றுவிட்டான்.
ஈஸ்வரமூர்த்தியோ
”என் பேரன் செஞ்ச தப்புக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்” என்றார் அதற்கு கண்ணகியோ