”இன்னுமா நீ இங்க இருக்க”
“எனக்கு வேற போக்கிடம் ஏது தாத்தா வாழ்ந்தாலும் செத்தாலும் அது உங்களோடதான்”
”என்ன விசயம் சட்டுன்னு சொல்லு நான் கல்லூரிக்கு போகனும்”
”நானும் வரேன் தாத்தா”
”முடியாது”
”இந்த ஒரு முறை மட்டும்”
”வேணாம் ஒதுங்கிப் போ”
”கண்ணகிகிட்ட மன்னிப்பாவது கேட்டுக்கறேன் தாத்தா ப்ளீஸ்” என கெஞ்ச அதில் அவர் மனம் இளகியது
”கண்ணகிக்கு எந்த விசயமும் தெரியாது நீ மன்னிப்பு கேட்டு அவள் மனசை உடைச்சிடாத நடந்தது நடந்ததாவே இருக்கட்டும், எதையும் யார்கிட்டயும் முக்கியமா கண்ணகிகிட்ட கூட சொல்ல வேணாம் சரியா”
”சரிங்க தாத்தா வேணா அவளை காப்பாத்த முடியாம போனதுக்காக மன்னிப்பு கேட்டுக்கறேனே ப்ளீஸ் தாத்தா, என்னால நிம்மதியா தூங்க கூட முடியலை குற்ற உணர்ச்சியில தவிக்கிறேன், என்னை காப்பாத்துங்க தாத்தா ப்ளீஸ்” என கைகூப்பி கெஞ்ச அதில் அவர் மனம் இரங்கி வந்தார்
”சரி வா” என அவனை அழைத்துக் கொண்டு கல்லூரிக்குச் சென்றார்
மறுபக்கம் கண்ணகி வீட்டின் முன் ஈஸ்வரமூர்த்தி வீட்டில் இருந்த வண்டி வந்து நின்றது அவளுக்காகவே ஒரு வண்டியை அனுப்பியிருந்தார். அது வந்ததும் கண்ணகி மாதவியிடம்