Page 18 of 24
”அப்படி தனியா எதுவும் நான் யோசிக்கலை சார் விதிவழி நடக்கட்டும்”
”உன் கல்யாணத்தை பத்தி ஏதாவது முடிவு எடுத்திருக்கியா”
“கல்யாணமா எனக்கா”
”ஏன் செய்துக்க மாட்டியா”
”என்னை யார் கல்யாணம் செய்துக்குவாங்க”
”கோவலன்”
”சார்” என அலறினாள்
”ஏன்மா என் பேரனை நீ கல்யாணம் செய்துக்க மாட்டியா”
”விளையாடாதீங்க சார் எனக்கும் அவருக்கும் செட்டாகாது”
”அதெல்லாம் உங்க பிரமை, நீ அவரை தாளாளராவும் அவன் உன்னை பிரின்சிபாலாவும் பார்க்கறதால அப்படி தெரியுது, கணவன் மனைவியான பின்னாடி ரெண்டு பேரும் ஒத்துப் போயிடுவீங்க”
”எனக்கு நம்பிக்கையில்லை சார்”
”ஆனா எனக்கு இருக்கு உன்னை முதல் முதல்ல பார்த்தப்பவே என் மனசு சொல்லிடுச்சி”
”என்னன்னு கோவலனுக்கு கண்ணகின்னா”
”ஆமாம்“