”கலங்காத கொம்பா, இது எல்லாமே சிவன் சித்தம் போறதுக்கு முன்னாடி உன்கிட்ட ஒண்ணு சொல்லனும்”
”என்ன சாமி”
”காவேரி நல்ல பொண்ணு நீ அவள்கூடதான் வாழனும், தேவையில்லாம இரண்டு பேரும் பழிவாங்கற எண்ணத்தில உங்க வாழ்க்கையை அழிச்சிக்காதீங்க” என சொல்லிவிட்டு காவேரியைப் பார்த்து மென்மையாக புன்னகைபூத்து
”சிவாய நம சிவாய நம” என சொல்லிக் கொண்டே அவ்விடம் விட்டு நடந்தே புறப்பட்டான் காசிக்கு.
அவன் சென்றதும் கொம்பன் மிகவும் உடைந்துவிட்டான், உயிர்நண்பன் என்றுமே அவனை விட்டு அகலவில்லை இப்போது அவன் சென்றதும் கலங்கிவிட்டான், சிறுபிள்ளை போல தேம்பி தேம்பி அழ அவனுக்கு அவனது பெற்றோர் ஆறுதல் கூறினார்கள், காவேரிக்கு கூட ஒரு நொடி கணக்குபிள்ளையின் இழப்பு வருத்தமாகதான் இருந்தது.
கொம்பனும் சமநிலைக்கு வர வெகுநேரம் எடுத்துக் கொண்டான், அதுவரை தானும் கணக்குபிள்ளையும் நண்பர்களாக இருந்த சமயம் என்னென்ன நடந்தது சுவாரஸ்யமான நிகழ்வுகளை அனைவரிடமும் சொல்லி தன் மனதை தேற்றிக் கொண்டான்.
காவேரி கூட கொம்பனுக்கு ஆறுதல் சொன்னாள், அன்றைய நாள் துக்க நாள் போலவே ஓடியது அதற்கு அடுத்த நாள் கொம்பன் தனது காயங்களை குணமாக்குவதில் மும்முரமாக இருந்தான். கணக்குபிள்ளை இல்லாத காரணத்தால் அவனின் முகம் வாட்டமாகவே இருந்தது, அவனே நண்பனின் பிரிவால் வருத்தத்திலும் நாய்கடியால் வலியிலும் இருந்ததால் அவனை தொந்தரவு செய்யாமல் விட்டாள் காவேரி.
நாய்கடிக்கு அவ்வப்போது ஊசியும் மருந்துகளும் சாப்பிட்டு எப்படியோ குணமானான் அதற்கே சில நாட்கள் ஓடியது.