Page 3 of 20
புத்தம் புது ஆளாக பளிச்சென்று காவேரி முன் வந்து நின்றான் கொம்பன் அவனைக்கண்டதும்
”அடடே பரவாயில்லையே தெம்பா இருக்க போல”
“ஆமாம்”
”அப்ப உன்னை பழிவாங்கலாம்”
”அட இரும்மா எப்ப பாரு அதே எண்ணம்தானா என் நண்பன் சொன்னது போல இந்த பழிவாங்கற எண்ணத்தை விட்டுட்டு நாம சேர்ந்து வாழ்ந்தா என்ன”
”நீயா இப்படி பேசறது”
”ஆமாம் நானேதான்“
”நம்ப முடியலையே இதுக்கு பின்னாடி ஏதாவது உள்குத்து இருக்கா”
”எதுவும் இல்லை இப்ப என் மனசு தெளிவா இருக்கு”
”உன்னை எப்படி நான் நம்பறது”
”என்ன செய்யனும் சொல்லு செய்றேன்”
”அப்போ என்னை விவாகரத்து செய்”
”என்ன விளையாடறியா ஏற்கனவே இதைபத்தி பேசியாச்சி”
”அது அப்போ”