”எதுக்கு இப்படி பேசி வைக்கற நான் வாழறதை பத்தி பேசினா நீ பிரியறதை பத்தி பேசற”
”போதும் என்னிக்கு இருந்தாலும் என் மனசுல உன்னை பழிவாங்கனும்ங்கற எண்ணம் ஓடிக்கிட்டே இருக்கும் நீயும் என் மேல வெறுப்போட ஒரு வாழ்க்கை வாழ்வ வேணாமே”
”யார் சொன்னா வெறுப்பான வாழ்க்கைன்னு அப்படியெல்லாம் இல்லை“
”இல்லை கொம்பா நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன் நாம பிரியறதுதான் சரி”
”இதுதான் உன் கடைசி முடிவா இதுல மாற்றம் இல்லையே”
”இல்லை”
”அப்ப எதுக்கு இங்க இருக்க கிளம்பு போ”
”எங்க”
”வேற எங்க உன் வீட்டுக்குதான் அதான் பிரியனும்னு சொல்லிட்டல்ல பின்ன இங்க இருந்து என்ன செய்யப் போற”
”அதுவும் சரிதான் நான் கிளம்பறேன்”
“ம்” என சொல்ல அவளும் கிளம்ப சித்தமானாள் அவள் செல்வதைக்குறித்து கொம்பன் தன் பெற்றோரிடம் கூற அவர்கள் மனம் வருந்தினார்கள் அவர்களை ஆறுதல்படுத்தினான்.
காவேரியும் தன் வீட்டிற்கு செல்ல கிளம்புமுன் கொம்பனின் பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள், அவர்களோ கண்கள் கலங்க அவளும் கண்கள் கலங்கினாள் கொம்பனோ
”ஆச்சா நேரமாகுது வா வா” என அழைக்க அவளும் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு