”என்னம்மா பார்க்கற உன் விசயம் எல்லாம் இவர்கிட்ட சொல்லிட்டேன் அவருக்கு உன்னை பிடிச்சிருக்கு வர்ற முகூர்த்தத்தில உனக்கும் இவருக்கும் கல்யாணம்”
”ஆனா அப்பா எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சி“
”அதுதான் வேணாம்னு வந்துட்டல்ல அப்புறம் என்ன”
”ஆனா அப்பா”
”இதப்பாரு ஒண்ணு நீ கொம்பனோட சேர்ந்து வாழனும் இல்லையா நான் பார்த்து வைச்ச மாப்பிள்ளையோட சேர்ந்து வாழனும் முடிவு உன் கையில சட்டுன்னு உன் முடிவு சொல்லு” என கேட்க அவளோ கலங்கி நின்றாள்
”உன்னால முடிவு எடுக்க முடியாது போதும்மா நீ உன் வாழ்க்கையை அழிச்சிக்கிட்டது நான் செத்ததுக்கு பின்னாடி உன்னை காப்பாத்த ஒரு துணை வேணும், அதுக்காகவாவது இந்த கல்யாணத்தை நீ செய்துக்கனும் இதுதான் என்னோட முடிவு இதுல மாற்றம் இல்லை” என சொல்லிவிட காவேரி துவண்டுப் போனாள்
மறுபக்கம் சண்முகம் கொண்டு வந்த பொய்யான மாப்பிள்ளை போல பொய்யான பெண்ணை அழைத்து வந்து கொம்பனின் முன் நிப்பாட்ட அவனோ கலங்கவில்லை மாறாக அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு தன் தந்தையிடம்
“காவேரி போல ஒருத்தியை கொண்டு வந்தாலாவது அவளை மறந்துட்டு வாழ்வேன் இவளை எப்படிப்பா போய் வேற பொண்ணை கூட்டிட்டு வாங்க” என நக்கலடித்தான்
”என்னடா நக்கலா, இதப்பாரு இவள்தான் எங்க மருமகள், வர்ற முகூர்த்தத்தில உனக்கும் இவளுக்கும் கல்யாணம், இந்த பொண்ணுக்கும் உன்னை ரொம்ப பிடிச்சிருக்காம்” என சொல்ல அவனோ அசந்துவிட்டான் அந்த பெண்ணைப் பார்த்து