(Reading time: 21 - 42 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”ஆமா நீதான் பார்த்தியாக்கும்”

  

”பார்க்கனுமா என்ன அவனை பார்த்து மயங்கிதானே என்னை மறந்துட்ட”

  

”உன்னை நான் மறந்துட்டேன்னு உனக்கு தெரியுமா நீயா கண்டபடி உளறாத”

  

”இதுல உளற என்ன இருக்கு உன் முகம் பளிச்சின்னு இருக்கே”

  

”என் முகம் அழுது வடிஞ்சியிருக்கு அது உனக்கு பளிச்சின்னு தெரியுதா”

  

”அழுதியா எதுக்கு ஓஓஓ அப்பாவை விட்டு வேற வீட்டுக்குப் போகனும்னு வருத்தப்படறியா, என்ன செய்றது எல்லாரும் என்னைப் போல  இருப்பாங்களா வீட்டோட மாப்பிள்ளையா வர்றதுக்கும் சிலருக்குதான் மனசு வரும்”

  

”போதும் என்னை வெறுப்பேத்ததான் இங்க வந்தியா போ இங்கிருந்து”

  

”முடியாது கல்யாண வேலைகள் ஏகப்பட்டது இருக்கும் நான் வேணா உதவி செய்யவா”

  

”ஒண்ணும் வேணாம் உன்னோட கல்யாண வேலைகளும் நிறைய இருக்கும் அதைப் போய் பாரு போ”

  

”எங்கப்பாவே எல்லாம் பார்த்துக்கிட்டாரு, எனக்கு அங்க எந்த வேலையும் இல்லை அதோட எனக்கு பார்த்து வைச்ச பொண்ணு என் வீட்ல இருக்கா, கல்யாணத்துக்கு முன்னாடியே பொண்ணும் பையனும் ஒரே வீட்ல இருந்தா ஊர் தப்பா பேசும்ல அதான் இந்த பக்கமா வந்தேன், ஆமா உனக்கு பார்த்து வைச்ச மாப்பிள்ளை எங்க இருக்கான்னு சொல்லு ஒரு முறை பார்த்துட்டு வரேன், கல்யாணத்துக்கு வரமுடியாதுல்ல அதுக்காக அவர்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன் அவர் வீட்டு அட்ரஸ் சொல்லு”

  

“அவசியம் இல்லை எனக்குன்னு பார்த்து வைச்ச மாப்பிள்ளை உள்ளதான் இருக்காப்ல”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.