”அப்படி அவள் வர்றதுக்குள்ள சீக்கிரமா வேங்கையனுக்கும் உனக்கும் கல்யாணம் செய்து வைக்கனும், அப்பதான் அவளே வந்தாலும் வேங்கையன் அவளை ஏத்துக்க மாட்டான்”
”ஆனா அவரு எப்படி என்னை கல்யாணம் செய்துப்பாரு”
”கொஞ்சம் கஷ்டம்தான், நீ அவன்கிட்ட உன் காதலை நிரூபி, தன்னால அவன் மனசு மாறுவான் அதுக்கு முன்னாடி நீ இங்க இருக்கற விசயத்தை உன் வீட்டுல சொல்லனும்“
”வீட்லயா ஆனா” என பயந்தாள்
“உனக்கு பயமாயிருந்தா என்கிட்ட சொல்லு நான் அவங்ககிட்ட பேசி புரியவைக்கிறேன்”
”இல்லை மாமா நானே பேசறேன், என்ன முதல்ல கோச்சிக்குவாங்க அப்புறம் என் விருப்பத்தை மதிச்சி ஒத்துக்குவாங்கன்னுதான் நினைக்கிறேன்“
”ம்ஹும் இது வேலைக்காகாது”
”என்னது மாமா”
”நீ ரெண்டுவிதமா பேசற ஒண்ணு செய்யலாம் உன் வீட்டு அட்ரஸ் சொல்லு”
”எதுக்கு மாமா”
”நானே ஒரு எட்டுப் போய் அவங்களை சந்திச்சி நடந்த அனைத்தையும் சொல்லி புரிய வைக்கிறேன்”
”அய்யோ மாமா”
”என்னம்மா அவங்க என்ன சிங்கமா புலியா, என்னை விடவா அவங்க கடுமையா நடந்துக்கப்