”அய்யோ அப்புறம் என்னாச்சி, அவனை ஆஸ்பிட்டலுக்கு அனுப்பியாச்சா”
”அனுப்பியாச்சி அவனால அந்த மிஷின் ரிப்பேர் ஆயிடுச்சி”
”மெக்கானிக்கை கூப்பிட்டு சரியாக்க வேண்டியதுதானே”
”கூப்பிட்டாச்சி, ரிப்பேர் வேலை நடந்திட்டிருக்கு, அதுவுமில்லாம அடிப்பட்டவனுடைய கையிலிருந்த இரத்தம் அங்கிருந்த துணிகள் மேல பட்டதினால அந்த இடத்தில வேலை நடக்காம நின்னு போயிடுச்சி சின்னய்யா, இதனால வேலையில தடங்கல் ஏற்பட்டிருச்சி, இரத்தக்கறை படிஞ்ச கொஞ்ச துணிகளை மாத்தி இடத்தை சுத்தம் பண்ணனும்”
”அப்ப அந்த பகுதியில வேலைக்கு வந்தவங்களை என்ன செய்றது” என கார்கோடகன் கேட்க அகத்தியனோ மேனேஜரைப் பார்த்து
“மேனேஜர் மிஷின் ரெடியாகற வரைக்கும் அந்த பகுதியில வேலை பார்த்தவங்களுக்கு சம்பளத்தோட விடுமுறை கொடுங்க, இன்னிக்கு ஒரு நாள் மட்டும்தான்” என சொல்ல மேனேஜர் சரியென தலையாட்டினார்.
சூப்பர்வைசர் கார்கோடனுக்கு எரிச்சலாக இருந்தது
”எதுக்காக சம்பளம் தரனும், அவனுங்க என்ன வேலையா செய்தாங்க, போகட்டும் விடுங்க” என்றான் அதிகாரமாக
”என்னையே அதிகாரம் செய்ற அளவுக்கு துணிஞ்சிட்டியா, இதப்பாரு இங்க நான் எடுக்கற முடிவுதான் செல்லும், உன் விருப்பு வெறுப்புகளை வெளிய காட்டு இங்க வேலைக்கு வந்தா நான் சொல்றபடிதான் நடக்கனும் புரியுதா” என அதட்ட அதோடு கார்கோடகன் எழுந்து நின்று சரி என்பது போல் மனமின்றியே தலையாட்டிவிட்டு கோபமாக வெளியேறிச் சென்றான்.
அவன் சென்றதும் குமரப்பனோ அகத்தியனிடம்