ரெய்டு நடக்கப்போகுது அதனால வேலையில எந்த பாதிப்பும் இருக்க கூடாது, அதிகாரிகள் வந்தா அவங்க வேலையை அவங்க பார்க்கட்டும், மத்தவங்க அவங்கவங்க வேலைகளை பார்க்கட்டும் சரியா”
”எல்லாம் சரிதான் சின்னய்யா ஆனாலும்” என பதட்டமாக
”ஏன் இப்படி பயப்படறீங்க தப்பு செய்றவங்கதான் பயப்படனும், ரெய்டு வந்ததை நினைச்சி நீ பயந்தா அப்போ இங்க ஏதோ தப்பு இருக்கறதாதான் அர்த்தம்“
”ஆமாம் சின்னய்யா”
”என்ன சொல்றீங்க”
”உங்க மாமா அங்கமுத்து அடிக்கடி கணக்குவழக்குகளை குழப்பிடுவாரு”
”குழப்புவாரா எதுக்கு”
”எதுக்குன்னா எதுக்குன்னா”
”பதில் சொல்லுங்க”
”அதை எப்படி நான் என் வாயால சொல்றது”
”இது சரிபட்டு வராது, நீங்க போய் அக்கவுண்டன்ட்டை வரச்சொல்லுங்க, நான் கணக்கு வழக்குகளை பார்க்கனும்” என சொல்ல குமரப்பனோ பலத்த சிந்தனையுடன் அறையை விட்டு வெளியேறிச் சென்றார்.
அவர் சென்றதும் முதல் முறை அகத்தியனுக்கு தனது மாமன் அங்கமுத்து மீது சந்தேகம் துளிர்த்தது. அந்நேரம் கதவு தட்டப்படும் ஓசையும் அதை தொடர்ந்து
”உள்ளே வரலாமா“ என இனிமையான பெண் குரலும் கேட்கவும் அகத்தியனின் கவனம்