”எனக்கு படிப்பு இருக்கு படிச்ச படிப்புக்கு எந்த வேலை கிடைக்குதோ அந்த வேலையை செய்துக்கிறேன், ஒரு வருஷம் கழிச்சி வந்து பார்க்கிறேன், அப்பவும் நீயும் கோவலனும் பிரிஞ்சிருந்தா நான் கோவலனோட வாழறேன் அப்ப நீயும் புது வாழ்க்கையை வாழனும் சரியா”
”இல்லை அது சரியா வராது”
”எல்லாம் வரும் நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு கோவலனைப் பார்த்து
”நான் கிளம்பறேன்”
”மாதவி அவசரப்பட்டு என்னை விட்டு போகாத”
”போகலை உங்க காதல் மேல எனக்கு நம்பிக்கையில்லை”
”ஏன் இப்படி பேசற, என் காதல் உண்மையானது”
”அது உண்மையா பொய்யான்னு தெரிஞ்சிக்கனும்”
”ஏன் பொய்யுங்கற”
”உங்களுக்கு கண்ணகியை பிடிக்கலைங்கறதால என்னை விரும்பறீங்கன்னு தோணுது”
”இல்லை ஆரம்பத்தில இருந்தே நான் உன்னைத்தான் விரும்பறேன்”
”இருக்கலாம் ஆனா இனிமேலயும் இருக்கான்னு பார்க்கிறேன், உங்களுக்கு இது பரிட்சை உங்க காதல் எந்தளவுக்கு உண்மைன்னு தெரிஞ்சிக்க நான் பரிட்சை வைக்கிறேன், இதுல நீங்க பாஸானா நான் உங்க மனைவியாவேன், இல்லைன்னா காலத்துக்கும் கண்ணகிதான் உங்க மனைவி”