🌼🌸❀✿🌷
“வாவ் அம்மா, என்ன சாஃப்ட் இட்லி! சூப்பர் சூப்பர்...” இட்லியை இதுவரை பார்த்தே இராதவனைப் போல குதூகலித்தான் விக்கிராந்த்!
தலையில் அடித்துக் கொண்ட வர்ஷா,
“ஹேய் அண்ணா, சும்மா சும்மா அம்மாக்கு ஐஸ் வைக்காத! அம்மாக்கு ஜலதோஷம் பிடிச்சுக்க போகுது! நீ பார்த்து, செலக்ட் செய்து வச்சிருக்க அண்ணியை அம்மா வேண்டாம்னு எல்லாம் சொல்ல மாட்டாங்க... கவலைப் படாதே,” என்றாள்!
“வர்ஷ், ஆர்த்தியை பார்த்தா அப்படி வேண்டாம்னு எல்லாம் சொல்ல யாருக்கும் மனசு வராது... நீயே பார்க்க தானே போற...”
“சரி சரி நீ அண்ணியை பார்த்த உடனே மயங்கிட்ட, புரியுது புரியுது... என்ன படிச்சிருக்காங்க அவங்க?”
“பி.ஈ..”
“வேலைக்கு போறாங்களா?”
“இல்லை, அவங்களுக்கு சொந்தமா நிறைய கால் டேக்ஸி இருக்கு... அதை இவளும் கவனிச்சுக்குறா...”
“கொஞ்சம்னா என்ன விக்கி? ஒரு டயர் அளவு? இல்லை டோர் அளவு?”
அருகில் அமர்ந்து அவர்களின் உரையாடலை கவனித்தப்படி இட்லியை சாப்பிட்டுக் கொண்டிருந்த கணபதி யோசனையுடன் மகனை பார்த்தார்.
“எத்தனை டேக்ஸி வச்சிருக்காங்க விக்கி?”