“விக்கி, நானும் வர்ஷாவும் போயிட்டு வரோம், நீயும் அப்பாவும் இங்கே இருங்க...” என்றாள் ராஜம்.
“ஏன் மம்ஸ்? நாங்க வந்தால் என்ன?” என்றான் விக்கிராந்த்!
“இல்லைப்பா பொண்ணுங்க மட்டும் தங்கி இருக்காங்க...”
“அவங்க போயிட்டு வரட்டும் விக்கி... நாம போனாலும் அவங்க எல்லோரும் பேசுறதை தான் நாம கேட்டுட்டு அமைதியா உட்கார்ந்திருக்க போறோம்... அதுக்கு இங்கேயே இருக்கலாம்...” என்றார் கணபதி!
“சரிப்பா..." என ஏற்றுக் கொண்ட விக்கிராந்த், ராஜமிடம், "மம்ஸ், சீக்கிரம் வாங்க ரொம்ப லேட் செய்யாதீங்க... ஆர்த்தி வீட்டில் எல்லோரும் காத்திருப்பாங்க...” என்றான்!
“நீ சொல்லிட்ட தானே விக்கி, கட்டாயம் சீக்க்க்க்கிரம் வரோம்...” என்றாள் வர்ஷா கிண்டலாக.
“நீ ஏன் அவனை வம்புக்கு இழுக்குற வர்ஷா?" என மகளை கண்டித்த ராஜம், விக்கிராந்திடம், "ரொம்ப நேரம் எல்லாம் ஆகாது விக்கி... சீக்கிரம் வந்திருவோம்...” என்றாள்!
அவர்கள் இருவரும் பெரிய கேட்டை திறந்து உள்ளே செல்வதை காரில் அமர்ந்தபடி பார்த்திருந்தான் விக்கிராந்த்.
கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழித்து, ராஜமும் வர்ஷாவும் அந்த வீட்டை விட்டு வெளியே வந்த போது, ப்ரியாவும் அவர்களுடன் வந்தாள்!
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தொடரும்...