(Reading time: 6 - 12 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

ஃபோன்காலை கட் செய்ற நீ????”

   

ராஜம் கோபமாக அல்லாமல் கேலியாக தான் கேட்டாள்! அதை புரிந்துக் கொண்டு,

  

“ஹி ஹி... உங்களோட தான் முப்பது வருஷமா பேசுறேனே அம்மா...” என்றான் விக்கிராந்த்!

  

“நீ பிழைச்சுப்படா... போ, போ... போய் பேசு... பை...“ என்று சொல்லிவிட்டு ராஜமே அழைப்பை துண்டித்தாள்!

  

அடுத்த வினாடியே, அவசரமாக ஆர்த்தியின் நம்பரை டையல் செய்தான் விக்கிராந்த்.

  

“ஹலோ விக்கி! நான் மூணு தடவை கால் செஞ்சேன்... யாரோட பேசிட்டு இருந்தீங்க?” ஆர்த்தியின் குரல் சிணுங்கும் குழந்தையைப் போல குழந்தைத் தனத்துடன் ஒலித்தது!

  

தானாக ஒரு புன்னகை மலர, “சாரி ஆர்த்தி... அம்மா கிட்ட பேசிட்டு இருந்தேன்...” என்றான் விக்கிராந்த்!

  

“ப்ச்... வெய்ட்டிங் காலில் என் பேர் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் தானே?” ஆர்த்தி இப்போதும் அதே சினுங்கலுடனே கேட்டாள்!

  

விக்கிராந்திற்கு அவள் உரிமையோடு கோபித்துக் கொள்வது பிடித்திருந்தது...! அவள் அழைத்த உடன் அவன் அழைப்பை ஏற்க வேண்டும் என்ற அவளின் எதிர்பார்ப்பும் பிடித்திருந்தது...

  

“சாரிம்மா... சொன்னேன் தானே கோவிலுக்கு போயிட்டு ஒரு வாரம் கழிச்சு வந்திருக்காங்க...”

  

விக்கிராந்தின் ‘சாரிம்மா’ ஆர்த்திக்கே புரியாத வகையில் அவளின் மனதை சமாதானப்படுத்தியது...

  

“சரி பரவாயில்லை விக்கி...” என்றாள் அவள்!

  

“அம்மா அப்பா சென்னைக்கு வராங்க ஆர்த்தி... அப்படியே இந்த வாரமே உங்க வீட்டுக்கும் வர

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.