போனாங்க இன்னுமா வர்றாங்க, பேசாம அத்தையை கூப்பிடலாம் அவங்க வந்தா தாத்தாவையும் அப்பாவையும் பார்த்துப்பாங்க” என நினைத்திருந்த நேரம்
”அப்பா அண்ணா” என கதறலுடன் ஒரு பெண்மணி பதறியபடி வந்தார் அவரைக் கண்டதும் அகத்தியன் நிம்மதியானான்
”அப்பாடா அத்தை வந்துட்டாங்க இனி எனக்கு நிம்மதி, இவங்களை இங்க விட்டுட்டு முதல் வேலையா நாச்சியா என்ன ஆனாள்ன்னு போய் பார்க்கனும்” என நினைத்தவன் அவனது அத்தை கலாவதி வரவும்
”அத்தை வாங்கத்தை” என பாசமாக அழைத்த அகத்தியனை கோபமாக முறைத்தார்
”செய்றதை எல்லாம் செய்துட்டு அத்தைன்னு வக்கனையா என்னை கூப்பிடறியா நீ” என திட்ட அவன் புரிந்துக் கொண்டான்.
கலாவதிக்கு பின்னால் அங்கமுத்து தன் மகள் ரூபாவதியை அழைத்துக் கொண்டு வந்தார்.
ரூபாவதியோ அகத்தியனை கண்டதும் கண்ணீர் மல்க நின்றாள், அதை வைத்தே புரிந்துக் கொண்டான் அகத்தியன் மாமா அனைத்தும் சொல்லி அழைத்து வந்திருக்கிறார் என்று அதற்கேற்ப அங்கமுத்துவும் அகத்தியனை பார்த்து இளப்பமாக சிரித்து வைக்க அகத்தியனோ அவரை கோபமாக முறைத்தான்
”அவரை ஏன்டா முறைக்கற, பாவி உன்னை நான் மலை போல நம்பினேன் இப்படியா என்னை ஏமாத்துவ, என் பொண்ணு வாழ்க்கையை நாசமாக்கிட்டியேடா படுபாவி”
”அத்தை நான் என்னிக்குமே உங்க பொண்ணை கல்யாணம் செயதுக்கறதா சொன்னதில்லையே, நீங்களே பல முறை கேட்டப்பவும் எனக்கு ரூபாவதி மேல விருப்பம் வரலைன்னு சொல்லிக்கிட்டுதானே இருந்தேன், இப்ப வந்து இப்படி பழி போடறீ்ங்க நான் ஒண்ணும் அவள் வாழ்க்கையை நாசமாக்கலை அத்தை”
”பேசாதடா என் பொண்ணு பிறந்தப்பவே பெரியவங்க ஒண்ணு சேர்ந்து உனக்கு ரூபாவதி