எழுந்து நின்றார்கள்.
“எல்லோரும் உட்காருங்க!” சந்திரமௌலி தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார்.
அடுத்த ஒரு மணி நேரம் கம்பெனியின் ஒவ்வொரு துறையின் வளர்ச்சி பற்றிய அறிக்கைகள், ரிப்போர்ட்கள் என்று பேசினார்கள், விவாதித்தார்கள். கடைசியாக சந்திரமௌலியின் கண்கள் வினாயக் மீது விழுந்தது.
“இந்த கம்பெனியிலேயே எந்த விதமான அவுட்கம்மும் இல்லாம இருக்குறது ஒரே ஒரு டிபார்ட்மென்ட் மட்டும்!” சந்திரமௌலி நேரடியாக துறையின் பெயரை சொல்லாமல் விட்டாலும் அவர் பார்வை பதிந்த இடம் யாரை சொல்கிறார் என்பதை எல்லோருக்கும் தெரியப் படுத்தியது. ப்ரியம்வதா வருத்தத்துடன் வினாயக்கை கவனித்தாள். வினாயக்கிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை.
“என் டிபார்ட்மென்ட் பத்தி சொல்றீங்கனா உங்களுக்கு இந்த கம்பெனி ப்ராடக்ட்ஸ் பத்தி தெரியலைன்னு அர்த்தம் சார். சூப்பர் குட் எலக்ட்ரானிக்ஸ் பேருல மார்க்கெட்ல இருக்க எல்லா பொருள் பின்னாடியும் எங்க டிபார்ட்மென்ட்டோட உழைப்பு இருக்கு,” என்றான் வினாயக்!
“இன்னும் எத்தனை வருஷம் இந்த பழைய கதையையே சொல்லிட்டு இருக்க போற வினாயக்? கடைசி இரண்டு வருஷமா ரோபோ செய்றேன் ரோபோ செய்றேன்னு கம்பெனி பணத்தை வேஸ்ட் செய்துட்டு இருக்க. இன்னைக்கு வரைக்கும் ஒரு பைசாக்கும் பிரயோஜனம் இல்லை,” சந்திரமௌலி தன் ஏமாற்றத்தை பேச்சில் வெளிப்படுத்தினார்!
“இந்த வருஷம் முடியுறதுக்கு முன்னாடி வொர்கிங் மாடல் ரெடி ஆயிடும் சார்,” என்றாச்ன் வினாயக்!
“அதை வச்சு நான் என்ன செய்ய? வொர்க் ஆகுமான்னு தெரிஞ்சுக்கவே மூணு வருஷம் தேவைப்பட்டா, அதுக்கு மேல ஒரு ப்ராடக்ட்டா டெவலப் ஆக எவ்வளவு வருஷம் ஆகும்??? ஒரு இருபது வருஷம்? சோம்பேறிகளுக்கு இந்த கம்பெனில இடம் கிடையாது வினாயக்!”