”இல்லை எந்த பக்கம் போறதுன்னு பார்க்கிறேன்”
”அதுசரி அம்மா தாயே நீ வீட்டுக்குள்ள போ எனக்கு டயர்டா இருக்கு எதையாவது சமைச்சி கொண்டா சாப்பிட்டு நான் கொஞ்சம் தூக்கம் போடறேன்”
”ம்க்கும் இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை ஒரு வாரம் ஊட்டியில என்ன செய்தீங்க ரெஸ்ட்தானே எடுத்தீங்க”
”அடடா உன்கிட்ட கேட்டது தப்பா போச்சி நானே போய் பார்த்துக்கிறேன்” என சொல்லியவன் காரைவிட்டு இறங்கி வீட்டிற்குள் செல்ல அவளும் பின்னாடியே வந்தாள்
”ஒருவாரம் கழிச்சி வர்றீங்க கல்லூரி என்னாச்சி கம்பெனி என்னாசிங்கற எண்ணம் இல்லாம இருக்கீங்களே”
”எண்ணம்லாம் இருக்கு எல்லாம் நான் சரி பண்ணிட்டுதானே போனேன், ஒண்ணும் ஆயிருக்காது”
”ஏதாவது ஆனா”
”ஆனா என்ன நான் பார்த்துக்கிறேன்” என சொல்லிவிட்டு அவன் சாப்பிட்டு ஓய்வு எடுக்கச் சென்றான். அவன் வந்ததும் அவளுக்கு அப்படியொரு சந்தோஷம், அவளே சமையல் செய்தாள் இரவு உணவு அவள் செய்த உணவை உண்டவனுக்கு வியப்புதான்
”வாவ் சூப்பரா செய்திருக்க கண்ணகி, உனக்கு சமையல் கூட வருமா சொல்லவேயில்லை” என சொல்ல அவளோ அவனை கோபமாக முறைக்க
”ஓ சாரி சாரி நல்லாதான் சமைச்சிருக்க ஆமா உனக்கே சமைக்க தெரியும்னா அப்ப மாதவிக்கும் சமைக்க வரும்ல” என ஆர்வமாக கேட்க அவளுக்கு கோபம் தலைக்கேறி அவனது தோளில் ஒரு அடி போட்டுவிட்டு சென்றுவிட, அவளது அடியில் அவனுக்கு சிறிது