வலித்தாலும் அவளது கோபத்தை வெகுவாக ரசித்தான் கோவலன்
மறுநாள் கல்லூரிக்கு செல்லும் முன் கண்ணகி அவனை நிப்பாட்டினாள்
”இப்ப என்ன வேணும் உனக்கு”
”சம்பளம் கொடுக்கற நாள் தள்ளி போயிடுச்சி மறந்துட்டீங்களா”
“அதனால என்ன கொடுக்கறேன் அடுத்த வாரம்”
”ப்ச் இப்படி சொன்னா எப்படி அவங்கவங்க சம்பளத்தை நம்பிக்கிட்டு வாழ்றாங்க ஏகப்பட்ட செலவுகள் இருக்குமே”
”இருக்கட்டுமே என்ன இப்ப, நான் என்ன தராமலா போயிடப்போறேன், கம்பெனியில ஆடிட்டிங் நடக்குது கல்லூரியிலயும் மாணவர்கள் சேர்க்கை நடக்குது, ரெண்டு இடத்திலயும் பண நடமாட்டம் இருக்கறதால கொஞ்சம் நாள் தள்ளி போகலாம், ஆனா கொடுத்துடுவேன்”
”உங்களை அந்த எமதர்மன்தான் தண்டிப்பாரு” என சொல்ல அவனோ அதிர்ந்தான்
”ஏய் என்ன இப்படி பேசற எமதர்மனா அவர் எதுக்கு இப்ப நடுவில வந்தாரு”
”பின்ன நீங்க செய்ற தப்புக்கு அவர்தானே தண்டனை தருவாரு”
”புரியற மாதிரி சொல்றியா” என கேட்க அவளோ
அஞ்சுபேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்
அதுஏது இங்குஎன்னில் நீசொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன்கூலி
சகலகலை ஓதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவச்சி கூலி
மகாநோவு தனைதீர்த்த மருத்துவன் கூலி