(Reading time: 7 - 13 minutes)
Azhagin motham neeya
Azhagin motham neeya

  

கலைவாணி கையை நீட்டிய இடத்தில் இருப்பவரை அக்கறையே இல்லாமல் கவனித்தாள் ப்ரியம்வதா. அவளுக்கு அவர்கள் ஊரில் இருக்கும் இன்ஸ்பெக்டரை தெரியவும் தெரியாது!

  

“எனக்கு எபப்டிம்மா யாரு அங்கே இன்ஸ்பெக்டரா இருக்கதுன்னு தெரியும்?” என்றாள் எரிச்சலுடன்!

  

“இன்ஸ்பெக்டர் தேன் தெரியாம நீ எப்படி மதியூர்ல ஒரு வருஷமா இருக்க? இன்ஸ்பெக்டர் சார்? தேன் சார்!” கலைவாணி சத்தமாக கூப்பிட்டாள்.

  

வேறு திசையில் நடந்துப் போய் கொண்டிருந்த அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணியின் குரல் கேட்டு நின்றான்.

  

“கலைவாணி மேடம், என்ன இங்கே கோர்ட்ல இருக்கீங்க? ஏதாவது ப்ராப்ளமா? கேஸ் ஏதாவது இருக்கா?” கலைவாணியை உடனே அடையாளம் கண்டுக் கொண்டு கேள்விகளை அடுக்கினான் இன்ஸ்பெக்டர்!

  

“அதெல்லாம் இல்லை இன்ஸ்பெக்டர். என் பொண்ணு யாரையோ பார்க்க வந்தா. வழில உங்களை பார்த்தோம். நீங்க ப்ரியம்வதாவை சந்திச்சது இல்லையே. இவ தான் என் பொண்ணு. மெட்ராஸ்ல பெரிய வேலையில இருந்தா. போன வருஷம் அவ அப்பா இறந்தப்புறம் எனக்காக வேலையை விட்டுட்டு வந்துட்டா!” கலைவாணி சுருக்கமாக விஷயத்தையும் சொல்லி, ப்ரியம்வதாவையும் இன்ஸ்பெக்டருக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

  

இன்ஸ்பெக்டர் தேன் பந்தா இல்லாமல் ப்ரியம்வதாவை பார்த்து புன்னகை புரிந்தான்.

   

“உங்களை மாதிரி அம்மா கூட இருந்து, பார்த்து, கவனிச்சுக்குறவங்க அபூர்வம். அம்மா சொன்னது மாதிரி நான் இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன். டைம் கிடைக்கும் போது வீட்டுக்கு வாங்க. என ஒய்ஃப் உங்களுக்கு நல்ல கம்பெனியா இருப்பா!”

  

“தேன் சார், சத்யா என்னவோ ஊருக்குள்ளே டிடக்டிவ் ஏஜென்சி ஆரம்பிச்சிருக்காளாமே?

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.