விஜயா என் கிட்ட சொன்னா!” கலைவாணி ப்ரியம்வதா பதில் பேச இடம் கொடுக்காமல் இன்ஸ்பெக்டரிடம் அடுத்த கேள்வி கேட்டாள்.
“ஆமா மேடம், அவளும் இன்னொரு போலீஸ்ல இருந்த ஃப்ரென்டுமா சேர்ந்து தொடங்கி இருக்காங்க. நான் வேண்டாம்னு சொல்லி பார்த்தேன். உங்களுக்கே சத்யா பத்தி தெரியும். எதையாவது சொன்ன கேட்குறவளா அவ? சரி அவளா போர் அடிச்சு போய் வேண்டாம்னு விட்டுட்டு வரட்டும்னு விட்டுட்டேன்!”
ப்ரியம்வதாவுக்கு அவர்களுடைய பேச்சை கேட்க விருப்பம் இருக்கவில்லை. இன்று வினாயக் கேஸில் தீர்ப்பு வரப் போவதாக கேள்வி பட்டு இருந்தாள். அதற்காக தான் அவனை தேடி கோர்ட்க்கு வந்திருந்தாள்.
வினாயக்கின் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்தது. அதனால் அவன் எங்கே இருக்கிறான் என்று அவளால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.
கலைவாணியும், இன்ஸ்பெக்டரும் அவருடைய மனைவி பற்றி பேசிக் கொண்டிருக்க, ப்ரியம்வதா கண்களால் வினாயக்கை கோர்ட் வளாகத்தில் தேடிக் கொண்டிருந்தாள்.
தொலைவில் வினாயக் வருவது தெரியவும், ப்ரியம்வதாவின் முகம் மலர்ந்தது. இன்ஸ்பெக்டரிடம் பேசிக் கொண்டிருந்த அம்மாவை விட்டு விட்டு வினாயக்கிடம் சென்றாள்.
“வினாயக்!”
“ப்ரியம்வதா!” வினாயக் கையில் இருந்த ஃபோனை சட்டை பாக்கெட்டில் வைத்தான்.
“உனக்கு தான் ஃபோன் செய்யனும்னு ஃபோனை கையில எடுத்தேன் ப்ரியம்வதா. என் சைபோர்க் என் கிட்டேயே வந்திருச்சு. எனக்கு சூப்பர் குட் எலக்ட்ரானிக்ஸ் கார்பொரேஷன் கொடுத்த சம்பளத்துக்கு காம்பன்சேஷன் கொடுத்தா என் சைபோர்க் எனக்கு தான்னு ஜட்ஜ் சொல்லிட்டார்!”
வினாயக்கின் முகம் மகிழ்ச்சியில் ஜொலித்தது! அதுவே ப்ரியம்வதாவிற்கு போதுமானதாக