“சாரி வினாயக். நான் அப்படி சொல்லி இருக்க கூடாது”
“நீ வேணும்னு சொல்லலைன்னு தெரியும். பரவாயில்லை ப்ரியம்வதா!”
“மதியூருல ஜில்லுன்னு கிளைமேட் நல்லா இருக்கும். உனக்கு வேண்டிய வசதி எல்லாம் கிடைக்கும். என்ன சொல்ற?”
“நான் இப்போ இருக்க நிலைமைல வேண்டாம்னு சொல்ல முடியாது. ஆமா, உங்க ஊரு பேரு என்ன சொன்ன?”
“மதியூர்!”
“மதியூர். வித்தியாசமான பேரு,” என்றான் வினாயக்!
🌼🌸❀✿🌷
டிரைவர் காரை ஓட்ட, வினாயக் டிரைவர் அருகே இருந்த முன் சீட்டில் இருந்தான். கலைவாணியும், ப்ரியம்வதாவும் பின் சீட்டில் அமர்ந்திருந்தார்கள். மூன்று பேரும் மதியூர் நோக்கி பயணம் செய்துக் கொண்டிருந்தார்கள்.
“அப்போ ரோபோ செய்றது மட்டும் தான் உங்க வேலையா? அதனால ஏதாவது பிரயோஜனம் இருக்கா?” கலைவாணி வினாயக்கிடம் கேட்டாள்!
ப்ரியம்வதா அம்மாவை முறைத்தாள். வினாயக் எந்த கவலையும் இல்லாமல் பதில் சொன்னான்.
“ஆமாம்மா. இப்போதைக்கு அதான் என் பிழைப்பு!”
“நீங்க ப்ரியா வேலை செஞ்ச கம்பெனில தான வேலை செஞ்சீங்க? அப்புறம் எப்படி நீங்க மட்டும் இப்படி வித்தியாசமா இருக்கீங்க?” என்றாள் கலைவாணி!